தாராபுரம் பகுதியில் 7000 பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீடு அட்டைகளை வழங்கிய ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், மக்களின் நலனை காப்பாற்றும் திட்டமாக இதை குறிப்பிட்டார்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம் பகுதியில், பிரதம மந்திரி காப்பீட்டு திட்டம் மற்றும் முதலமைச்சர் விரிவான காப்பீட்டு திட்டத்துடன் இணைந்து, ரூபாய் 5 லட்சம் வரையிலான இலவச மருத்துவ காப்பீடு அட்டைகளை சுமார் 7000 பயனாளிகளுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது,

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மருத்துவம் மற்றும் கல்வி துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதாக குறிப்பிட்டு, மக்களை தேடி மருத்துவம் மற்றும் இன்னுயிர் காப்போம் 48 போன்ற பல நலத்திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார் என்று தெரிவித்தார்.
மேலும், அமைச்சர் பொதுமக்கள் அனைவரும் இதுபோன்ற சிறப்பு முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது,
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மருத்துவம் மற்றும் கல்வி துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதாக குறிப்பிட்டு, மக்களை தேடி மருத்துவம் மற்றும் இன்னுயிர் காப்போம் 48 போன்ற பல நலத்திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார் என்று தெரிவித்தார்.
மேலும், அமைச்சர் பொதுமக்கள் அனைவரும் இதுபோன்ற சிறப்பு முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.