தாராபுரத்தில் 7000 பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீடு அட்டை வழங்கிய அமைச்சர் கயல்விழி செல்வராஜ்

தாராபுரம் பகுதியில் 7000 பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீடு அட்டைகளை வழங்கிய ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், மக்களின் நலனை காப்பாற்றும் திட்டமாக இதை குறிப்பிட்டார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம் பகுதியில், பிரதம மந்திரி காப்பீட்டு திட்டம் மற்றும் முதலமைச்சர் விரிவான காப்பீட்டு திட்டத்துடன் இணைந்து, ரூபாய் 5 லட்சம் வரையிலான இலவச மருத்துவ காப்பீடு அட்டைகளை சுமார் 7000 பயனாளிகளுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வழங்கினார்.



இந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது,



தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மருத்துவம் மற்றும் கல்வி துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதாக குறிப்பிட்டு, மக்களை தேடி மருத்துவம் மற்றும் இன்னுயிர் காப்போம் 48 போன்ற பல நலத்திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார் என்று தெரிவித்தார்.

மேலும், அமைச்சர் பொதுமக்கள் அனைவரும் இதுபோன்ற சிறப்பு முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...