ஆனைக்கட்டி பகுதியில் வசிக்கும் ஆதிவாசி மக்களுடன் பொங்கல் விழா

பொங்கல் விழாவிற்கு ஆதிவாசி மக்களுடன் இணைந்து வந்திருந்த கல்லூரி மாணவ, மாணவிகள், 21 அரிமா சங்கங்களை சேர்ந்த உறுப்பினர்கள், சாப்ட்வேர் கம்பெனிகளில் வேலை செய்யும் ஊழியர்கள் உள்பட அனைவரும் உற்சாகமாக நடனம் ஆடி அசத்தினர்.


கோவை: கோவை ஆனைகட்டி பகுதியில் உள்ள மலை கிராமங்களில் என்.எம்.சி.டி. அறக்கட்டளை மற்றும் அரிமா சங்கங்கள் சார்பில் பழங்குடிகளான ஆதிவாசி மக்களுடன் 14ம் ஆண்டாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.



விழாவில் ஆதிவாசி மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கியும், ஆதிவாசி மக்களுடன் இணைந்து கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் பொங்கல் வைத்து பாரம்பரிய நடனமாடி பொங்கல் கொண்டாடினர்.

கோவை நேட்டிவ் மெடிக்கேர் அறக்கட்டளையானது ஏழை, எளிய மற்றும் மலைவாழ் மக்களுக்காக கடந்த 35 ஆண்டுகளாக சமூக மேம்பாட்டுப்பணியை செய்து வருகிறது. அதன் தொடர்சியாக வருடந்தோறும் கோவை ஆனைகட்டி கோபனாரிப் பகுதியில் உள்ள அனைத்து பழங்குடி கிராமங்களையும் அழைத்து பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளது.

இந்த வருடம் ஆனைகட்டி அருகிலுள்ள கோபனாரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு அருகில் அமைந்துள்ள நபார்ட் கிராமசந்தை வளாகத்தில் 14வது ஆண்டாக பொங்கல் விழா வெகு சிறப்பாக நடத்தப்பட்டது.



முன்னதாக விழாவிற்கு வந்தவர்களை ஆதிவாசி மக்கள் தங்களது முறைப்படி பூக்கள் மற்றும் மூங்கில் குச்சி கொடுத்து வரவேற்றனர்.



தொடர்ந்து பொங்கல் வைக்கப்பட்டு பொங்கும்போது, பொங்கலோ பொங்கல் என சிறப்பு விருந்தினர்களும், ஆதிவாசி மக்களுக்கு கோசங்களை எழுப்பினர்.

இந்த விழாவிற்கு நிர்வாக அறங்காவலர் ஏ.எஸ்.சங்கரநாராயணன் தலைமை தாங்கினார். அரிமா சங்க ஆளுநர் ராம்குமார் முன்னிலை வகித்து பேசினார். இவ்விழாவில் தாட்கோ மாவட்ட மேலாளர் மணிமேகலை, கோவை மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.



அதன்பின்னர் ஆதிவாசி மக்களுடன் இணைந்து வந்திருந்த கல்லூரி மாணவ, மாணவிகள், 21 அரிமா சங்கங்களை சேர்ந்த உறுப்பினர்கள், சாப்ட்வேர் கம்பெனிகளில் வேலை செய்யும் ஊழியர்கள் உள்பட அனைவரும் உற்சாகமாக நடனம் ஆடி அசத்தினர்.



அதன்பின்னர் 46 ஆதிவாசி கிராமங்களை சேர்ந்த சுமார் 1000 மலைவாழ் மக்களின் குடும்பங்களுக்கு புத்தாடைகள், லேப்டாப், பரிசல், மலைவாழ் மக்களின் வாத்தியங்கள் என நலத்திட்ட உதவிகள் வழங்கபட்டன.



இதில் 21 அரிமா சங்கங்களை சேர்ந்த உறுப்பினர்கள், சாப்ட்வேர் கம்பெனிகளில் வேலை செய்யும் ஊழியர்கள், ஆதிவாசி மக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். இவ்விழாவின் இறுதியில் கரிகாலன் நன்றி கூறினார். மேலும் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை நேட்டிவ் மெடிக்கேர் அறக்கட்டளை செய்திருந்தது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...