உடுமலை சுற்றுவட்டார கிராமங்களில் பொங்கலை வரவேற்கும் விதமாக சலகெருது, தேவராட்டம் ஆடிக் கொண்டாட்டம்

பொங்கல் அன்று கால்நடைகளுக்கு உகந்த கோவிலான உடுமலை அருகே உள்ள புகழ்பெற்ற மால கோவிலுக்கு சென்று கால் நடைகள் நோய் நொடி இன்றி வாழ வழிபாடு நடத்துவோம் என கிராம மக்கள் தெரிவித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுவட்டார பகுதிகளான பெதம்பம்பட்டி, எஸ்.அம்மாபட்டி, லிங்கமாவூர், கொங்கல்நகரம் புதூர், பொட்டயம்பாளையம், சனுப்பட்டி, வல்லகுண்டபுரம், மரிக்கந்தை, கொங்கலகுறிச்சி, வாளவாடி உட்பட பல்வேறு கிராம பகுதிகளில் கிராம மக்கள் பொங்கலை வரவேற்கும் விதமாக மார்கழி மாதங்களில் இரவு நேரங்களில் காளைகளுடன் சல கெருது, தேவராட்டம் ஆடி வருகின்றனர்.



மேலும் ஆண்கள் மற்றும் சிறுவர்கள் சலகெருது மறித்தல் எணும் விளையாட்டை ஆடுவார்கள்.



குச்சிகளை நீட்டினால் காளைகள் முட்ட வரும்.



குச்சிகளை குறுக்கே வைத்தால் காளைகள் நிற்கவும் பழக்கி ஆடும் இந்த ஆட்டதோடு இல்லாமல் உருமி இசைகருவி முழுங்க தேவராட்டம், இரட்டையர் தேவாராட்டம் ஆண்கள் ஆடுவார்கள்.



மேலும் பாரம்பரியமான பாடல்களுக்கு பெண்கள் கும்மி ஆட்டம் ஆடையும் தங்களது மகிழ்ச்சியை தெரிவிப்பார்கள்.

பொங்கலுக்கு முன்பு காளைகளுக்கு படையல் செய்து அவற்றை காளைகள் உண்ட பின்பே பொங்கலை கொண்டாட தொடங்கும் கிராமத்தினர் மாட்டு பொங்கல் அன்று கால்நடைகளுக்கு உகந்த கோவிலான உடுமலை அருகே உள்ள புகழ்பெற்ற மால கோவிலுக்கு சென்று கால் நடைகள் நோய் நொடி இன்றி வாழ வேண்டுவார்கள்.

முன்னோர்கள் கூறிய அறிவுரையின் பேரில் காலம் காலமாக இந்த நிகழ்வு தொடர்ந்து வருவதாக கூறும் கிராமத்தினர், கால்நடைகளை தெய்வம் ஆக கருதி வருகிறோம் என்றனர். ஒற்றுமையை வளர்கவும், கொட்டும் பணியை விரட்டவும் சிறந்த உடற்பயிற்சியாகவும் ஆடும் இந்த சலகெருது மறித்தல், தேவராட்டம் உள்ளிட்டவை விவசாயமும், கால்நடை வளர்ப்புமே பிரதானமாக இருந்த காலத்தில் பொங்கலை வரவேற்கும் விதமாக மார்கழி மாதத்தில் இரவு தொடங்கி பொங்கல் வரை நள்ளிரவு வரை நிகழ்த்தப்பட்டு வருகிறது என கிராம மக்கள் தெரிவித்தனர்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...