கோவை மாநகராட்சி நடப்பாண்டு பட்ஜெட்டில் குப்பை மேலாண்மை, ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், லாரி நிறுத்தம், ஸ்மார்ட் சிட்டி திட்டம் உள்ளிட்டவற்றிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியின் 2017-18ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை மாநகராட்சி ஆணையாளரும், தனி அலுவலருமான விஜய கார்த்திகேயன் இன்று வெளியிட்டார்.
கடந்த 1996ம் ஆண்டிற்கு பிறகு முதல் முறையாக உள்ளாட்சி பிரதிநிதிகள் இன்றி மாநகராட்சி அதிகாரிகள் வெளியிட்ட பட்ஜெட்டில் மொத்த வருமானம் 1072 கோடிகள் எனவும் செலவீனம் 1059 கோடி ரூபாய் எனவும் உபரி நிதி 13 புள்ளி 04 கோடி ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட்டில் கோவை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக மத்திய அரசு மற்றும் மாநில அரசின் பங்கு தொகைகளான தலா கோடி ரூபாய் பெறப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குப்பை மேலாண்மையின் ஒரு பகுதியாக குப்பை தொட்டிகளில் குப்பைகள் நிறைந்தவுடன் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தும் சென்சார் திட்டம் செயல்படுத்த 15 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதே போல் கோவை மாநகராட்சியில் உள்ள 8 குளங்களை மேம்படுத்த 15 கோடி ரூபாயும், அம்ருட் திட்டத்தின் மூலம் மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள வார்டுகளை மேம்படுத்த 428
லட்சம் ரூபாயும் , வெள்ளலூர் பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க 171.86 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதே போல் பல அடுக்கு வாகன நிறுத்தம் உள்ளிட்ட பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.