திருப்பூர் காதர் பேட்டையில் உள்ள அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்

பவளக்கொடி கும்மி குழுவினரின் சார்பில் கடந்த 15 நாட்களாக கும்மி நடனம் பயிற்சி பெற்ற 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் இன்று பவளக்கொடி கும்மி குழுவினருடன் இணைந்து பள்ளி வளாகத்தில் கும்மி ஆடி அரங்கேற்ற நிகழ்ச்சியை நடத்தினர்.


திருப்பூர்: பொங்கல் விழா இன்னும் இரண்டு தினங்களில் கொண்டாடப்பட உள்ள நிலையில் நாளைய தினம் முதல் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் என்பதால் இன்றைய தினமே திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் பொங்கல் விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.



அதன் ஒரு பகுதியாக திருப்பூர் காதர் பேட்டை பகுதியில் உள்ள நஞ்சப்பா மாநகராட்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் வழிகாட்டுதலின் பேரில் பள்ளி மாணவர்கள் பொங்கல் வைத்து சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடினர்.



பாரம்பரிய முறைப்படி விறகு மூட்டி பொங்கல் வைத்து பொங்கலோ பொங்கல் என கூச்சலிட்டு பொங்கல் வைத்து மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.



இதனை தொடர்ந்து பவளக்கொடி கும்மி குழுவினரின் சார்பில் கடந்த 15 நாட்களாக கும்மி நடனம் பயிற்சி பெற்ற 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் இன்று பவளக்கொடி கும்மி குழுவினருடன் இணைந்து பள்ளி வளாகத்தில் கும்மி ஆடி அரங்கேற்ற நிகழ்ச்சியை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கான பல்வேறு தமிழர்கள் பாரம்பரிய கலை விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. பொங்கல் பண்டிகையின் மரபு மாறி வரக்கூடிய சூழ்நிலையில் பொங்கல் பண்டிகையின் மகத்துவத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருவதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் பழனிசாமி தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...