நாட்டுப்புறக் கலைஞர்களின் கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், பறையாட்டம் முதலான நிகழ்வுகளும் பொங்கல் விழாவுக்கு மேலும் சிறப்பு சேர்த்தன.
கோவை: கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம் 12.01.2024, வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது.

காளை மாடுகள், குதிரைகள், ஆட்டுக்கிடாய்களின் வரிசையுடன் நடைபெற்ற விழாவினை துணைவேந்தர் முனைவர் ப.வெங்கடாசலபதி அவர்கள் தொடங்கிவைத்தார்.

விழாவையொட்டி மாணவர்களின் வள்ளிக்கும்மி நிகழ்ச்சி அரங்கேற்றப்பட்டது.
தமிழர்களின் வீர விளையாட்டாகிய சிலம்பம் மற்றும் ஒற்றைக்கம்பு வீச்சுப் போட்டிகளில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

அத்துடன் பொங்கல் வைத்தல், கோலமிடுதல், நாட்டுப்புற நடனமாடல் போட்டிகளும், உரியடித்தல், கயிறிழுத்தல் ஆகிய விளையாட்டுப் போட்டிகளும் சிறப்புற நடைபெற்றன.

நாட்டுப்புறக் கலைஞர்களின் கரகம், பொய்க்கால் குதிரை ஆட்டம், பறையாட்டம் முதலான நிகழ்வுகளும் விழாவுக்கு மேலும் சிறப்பு சேர்த்தன.
காளை மாடுகள், குதிரைகள், ஆட்டுக்கிடாய்களின் வரிசையுடன் நடைபெற்ற விழாவினை துணைவேந்தர் முனைவர் ப.வெங்கடாசலபதி அவர்கள் தொடங்கிவைத்தார்.
விழாவையொட்டி மாணவர்களின் வள்ளிக்கும்மி நிகழ்ச்சி அரங்கேற்றப்பட்டது.
தமிழர்களின் வீர விளையாட்டாகிய சிலம்பம் மற்றும் ஒற்றைக்கம்பு வீச்சுப் போட்டிகளில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
அத்துடன் பொங்கல் வைத்தல், கோலமிடுதல், நாட்டுப்புற நடனமாடல் போட்டிகளும், உரியடித்தல், கயிறிழுத்தல் ஆகிய விளையாட்டுப் போட்டிகளும் சிறப்புற நடைபெற்றன.
நாட்டுப்புறக் கலைஞர்களின் கரகம், பொய்க்கால் குதிரை ஆட்டம், பறையாட்டம் முதலான நிகழ்வுகளும் விழாவுக்கு மேலும் சிறப்பு சேர்த்தன.