கோவை மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவில் அறங்காவலர்கள் முறைகேடு குற்றச்சாட்டில் பணியிடை நீக்கம்

கோவை மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவில் அறங்காவலர் கிருஷ்ணசாமி மற்றும் மற்றொருவர் முறைகேடு குற்றச்சாட்டில் இந்து அறநிலையத்துறையால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


கோவை: கோவை மதுக்கரை மரப்பாலம் பகுதியில் உள்ள தர்மலிங்கேஷ்வரர் கோவில் அறங்காவலர் கிருஷ்ணசாமி மற்றும் திருமூர்த்தி ஆகிய இருவரையும் இந்து அறநிலையத்துறையினர் பணியிடை நீக்கம் செய்துள்ளனர். இந்த நடவடிக்கை முறைகேடுகள் நடைபெற்றதாக சி.கே.கண்ணன் என்பவர் கொடுத்த புகாரின் பின்னணியில் எடுக்கப்பட்டது.

விசாரணையில், உண்டியல் பணம் மற்றும் நன்கொடை வசூலில் முறையான கணக்கு இல்லாமை, அரசிடம் அனுமதி பெறாமல் கட்டுமான பணிகள் மேற்கொண்டல், கோவிலுக்கு நிதி இழப்பு ஏற்படுத்தியதும், கையாடல் மூலம் இருப்பதும் தெரியவந்துள்ளது. குறிப்பாக, மதுக்கரை நெடுஞ்சாலையில் உள்ள 28 ஏக்கர் நிலம் ரூ.125 கோடி மதிப்பிலானது கோவில் பெயரில் இல்லாமல் இருந்தது மற்றும் இந்த சொத்துகள் மூலம் வருமானம் ஈட்ட எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளார் என்பதும் விசாரணையில் வெளிப்பட்டுள்ளது. மேலும், திருமண மண்டபத்தை அன்னதான மண்டபம் என கணக்கு காட்டி, அதிலிருந்து வரும் வருவாயை கையாடல் செய்திருப்பதும் கண்டறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டுகள் காரணமாக அறங்காவலர் கிருஷ்ணசாமி மற்றும் திருமூர்த்தி ஆகிய இருவரையும் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளார். இந்த நிலையில், கோவிலின் நிதி மற்றும் நிர்வாக செயல்பாடுகளில் காணப்பட்ட குறைபாடுகள் மேலும் ஆழமாக விசாரிக்கப்பட உள்ளது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...