கோனேரிப்பட்டி பிரிவில் கருப்பு பொங்கல் வைத்து நல்லதங்காள் அணைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்குள் விவசாயிகளுக்கு முழு இழப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தேர்தலை புறக்கணிக்க போவதாக நல்லதங்கள் அணைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் தெரிவித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள பொன்னிவாடி கிராமத்தில் உள்ள நல்லதங்காள் ஓடை நீர்த்தேக்க அணைக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு முழு இழப்பீடு கேட்டு 151-நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்த நிலையில் விவசாயிகளின் முக்கிய விழாக்களில் ஒன்றான பொங்கல் விழாவையொட்டி போராட்ட பந்தலில் இன்று கருப்பு பொங்கல் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனத் தலைவர் ஈசன் முருகசாமி கூறும்போது, நல்லதங்காள் அணை கட்டுவதற்கு சுமார் 720-ஏக்கர் நிலம், சுமார் 120-பேரிடம் இருந்து கையகப்படுத்தப்பட்டது. இதற்கு இழப்பீடாக மானாவாரி பூமி ஏக்கர் ரூ.9,000, தோட்ட பூமி ஏக்கர் ரூ.27,000 வழங்கப்படும் என அப்போது அறிவிக்கப்பட்டது.

இது மிகவும் குறைவாக இருந்ததால் விவசாயிகள் ஆட்சேபனை தெரிவித்து, கூடுதல் தொகை கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். நீதிமன்றம் விவசாயிகளின் மணுவை விசாரித்து முழு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. ஆனால் 20 ஆண்டுகள் கடந்தும் விவசாயிகளுக்கு உரிய முழு இழப்பீட்டுத் தொகை வழங்கவில்லை.

இதனால் ஏமாற்றம் அடைந்த விவசாயிகள் பொன்னிவாடி கிராமம் கோனேரிப்பட்டி பிரிவு பகுதியில் பந்தல் அமைத்து கடந்த 151, நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் முக்கிய நாளான பொங்கல் விழாவையொட்டி போராட்ட பந்தலில் நல்லதங்காள் ஓடை அணைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் கருப்பு பொங்கல் வைத்து தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம்.

மேலும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்குள் விவசாயிகளுக்கு முழு இழப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவிக்கிறோம் என இவ்வாறு தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...