தமிழ்நாடு வேளான்மைப் பல்கலைக்கழகத்தில் கால்நடைகளுக்கு மரியாதையை செலுத்தும் விதமாக பட்டி பொங்கல் கோலாகலம்

பட்டி பொங்கலை முன்னிட்டு வேளாண் பல்கலையில் உள்ள, பருத்தி, நெல் மற்றும் தோட்டக்கலை துறைகளில் பணிபுரியும் விவசாய பண்ணை தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.


கோவை: கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையில், ஒவ்வொரு ஆண்டும் பட்டி பொங்கல் விழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி பட்டி பொங்கல் விழாவுக்கு, மாடுகளை ஊர்வலமாக அழைத்து வந்து சூரியனுக்கு படையல் வைத்து பொங்கலை, மாடுகளுக்கும் உணவாக கொடுத்தனர்.



வேளாண் பல்கலையில் உள்ள, பருத்தி, நெல் மற்றும் தோட்டக்கலை துறைகளில் பணிபுரியும் விவசாய பண்ணை தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. கயிறு இழுக்கும் போட்டிகள், சிலம்பாட்டம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு வேளாண் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி அவர்கள் பரிசுகளை வழங்கினார். பின்னர் ஒன்பது திரவியங்கள் நிரப்பப்பட்ட பாத்தியில் பசுமாட்டை மிதிக்க வைத்தனர். இதில் நவதானிய குங்குமம் உள்ள பாத்தியில் பசு கால் வைத்ததால் இந்த ஆண்டு நல்ல மழை பெய்து விவசாயம் செழித்து மங்களகரமாக இருக்கும் என வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் துணைவேந்தர் கீதாலட்சுமி கூறும்போது, பட்டி பொங்கல் விழா என்பது உழவர்களுக்கு மட்டுமல்ல, உழவுத் தொழிலோடு சம்பந்தப்பட்ட அனைத்து உயிர்களுக்கும் சேர்த்து கொண்டாடப்படும் பொதுவான விழாவாகும் எனவும், வேளாண் மக்கள் உழவுத்தொழில் செய்து அறுவடை செய்த தானியங்களை, இயற்கையின் கடவுளான சூரியனுக்கு படைத்து மகிழ்கின்ற நாளாக, ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இதில் பட்டி மிதிக்கும் நிகழ்ச்சியில் 9 திரவியங்கள் நிரப்பப்பட்ட பாத்தியில் பசு மாட்டை மிதிக்க வைத்து, எந்த பாத்தியில் மிதிக்கிறதோ அந்த பாத்தியில் உள்ள பொருள் சார்ந்த தானியம் வளம் பெருகும் என்பது ஐதீகம். பாரம்பரியமாக இவ்விழா பல்கலைக்கழகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருவது பண்ணை தொழிலார்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக கூறினார்.

Newsletter

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...