தடாகம் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்

தடாகம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் தலைமையில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில், சிறப்பு விருந்தினராக பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி நமச்சிவாயம் தனது மனைவியுடன் கலந்துக்கொண்டார்.


கோவை: கோவை தடாகம் காவல் நிலையத்தில் கொண்டாடப்பட்ட சமத்துவப் பொங்கல் விழாவில் பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம் உள்பட அனைத்து காவலர்களும் ஒரே மாதிரியான வேட்டி சட்டை அணிந்து பொங்கல் வைத்து மகிழ்ச்சியாக கொண்டாடினர்.

கோவை மாவட்ட காவல்துறைக்குட்பட்ட அனைத்து காவல் நிலையங்களிலும் பொங்கல் விழா வெகு விமர்ச்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கணுவாய் அடுத்துள்ள தடாகம் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

இதற்கு தடாகம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி நமச்சிவாயம் தனது மனைவியுடன் கலந்துக்கொண்டார். காவல்நிலையத்திலுள்ள அனைத்து காவலர்களுக்கும் ஒரே மாதிரியான பாரம்பரிய வேட்டி – சட்டை அணிந்து பொங்கலை கொண்டாடினர்.

தொடர்ந்து ஊர்பொதுமக்களுடன் இணைந்து சர்க்கரை பொங்கல் வைக்கப்பட்டது. பொங்கல் பொங்கும்போது காவல்துறையினர் பொங்கலோ பொங்கல் என கோசமிட்டனர்.

பின்னர் இலையில் பொங்கல் படையிலிட்டு தேங்காய் உடைத்து சூரிய பகவானுக்கு நன்றி கூறி அனைவரும் சாமி கும்மிட்டனர். அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. தொடர்ந்து பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளருடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்வில் காவலர்கள் ஆர்வமுடன் கரும்புகளை பல்லால் கடித்து சுவைத்து மகிழ்ந்தனர்.



இதில் எஸ்.ஐ. ஜீவன்ராஜ்துரை, எஸ்.ஐ.ஐயாசாமி, பெரியநாயக்கன்பாளையம் தனிபிரிவு எஸ்.ஐ ஐயப்பன், எஸ்.எஸ்.ஐ அந்தோனிசாமி, தலைமை காவலர்கள் முருகன், முருகேசன், தனிப்பிரிவு போலீஸ் செல்லக்கண்ணு, காவலர்கள் ஜனக்குமார், ராமராஜ், பாலமுருகன், நட்டார், தமிழரசன், குமரேசன், கார்த்திக் மற்றும் ஊர்பொதுமக்கள் திரளாக கலந்துக்கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...