ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடக்கி இருப்பது தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்ட நடவடிக்கை - த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடக்கி இருப்பது தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்ட நடவடிக்கை எனவும், இந்த இடைத்தேர்தல் சவாலான தேர்தலாகவும், சுவராஷ்யமான தேர்தலாகவும் இருக்கும் எனவும் த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கோவை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இதில் கலந்து கொள்ள வந்த அக்கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர் சந்தித்தார். அப்போது  உள்ளாட்சி தேர்தல் தொடர்பான பணிகள் குறித்து ஆலோசனை நடத்த மாவட்டம் தோறும் பயணம் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு விரைவாக நடத்த வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டு நிறைய இடங்களை வெல்ல வேண்டும் என்பதே தங்களது விருப்பம் எனவும் அதே வேளையில் ஓருமித்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி  அமைக்கவும் வாய்பிருக்கின்றது எனவும் தெரிவித்தார். மேலும் தமிழக அரசு பெட்ரோல், டீசலுக்கு வாட்வரியை உயர்த்தி இருப்பதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் உடனடியாக உயர்த்தப்பட்ட வாட் வரியை  திரும்ப பெற வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். பவானி ஆற்றின்  குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டும் விவகாரத்தில்  மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்த அவர் மத்திய அரசு இப்பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு  கட்டப்பட்ட தடுப்பணைகளை அகற்ற வேண்டும்  என தெரிவித்தார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடக்கி இருப்பது தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்ட நடவடிக்கை என்று தெரித்த அவர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் சவாலான தேர்தலாகவும், சுவராஷ்யமான தேர்தலாகவும் இருக்கும் எனவும் தெரிவித்தார். இனிமேல் வருகின்ற பொதுத்தேர்தல்களில் பெரும்பான்மை எந்த அரசியல் கட்சிக்கும் இருக்காது எனவும் அவர் தெரிவித்தார்.

சட்டமன்றத்தில் சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானமானது சபையில் இருக்கும் உறுப்பினர்களை பொறுத்து அமையும் எனவும் ஜி.கே.வாசன் தெரித்தார். மேலு, இனிமேல் தன்னுடைய கூட்டங்கள் பட்டாசு வெடித்தல், சால்வை, பொன்னாடை அணிவித்தல் போன்றவற்றை தவிர்க்குமாறு தொண்டர்களுக்கு வலியுறுத்தி இருப்பதாகவும் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...