அமராவதி ஆற்றில் நீரில் மூழ்கி உயிரிழந்த மூன்று பேரின் குடும்பத்தினற்கு அமைச்சர் கயல்விழி ஆறுதல்

ஆன்மீக சுற்றுலாவுக்கு சென்று விட்டு மதுரை செல்லும் வழியில் தாராபுரம் புறவழிச்சாலை அமராவதி ஆற்றில் குளிக்கச் சென்று சின்னகருப்பு, பாக்கியராஜ், ஹரி ஆகிய மூன்று பேர் பாறை இடுக்குகளில் சிக்கி உயிரிழந்தனர்.


திருப்பூர்: அமராவதி ஆற்றில் நீரில் மூழ்கி உயிரிழந்த மூன்று பேர் குடும்பத்திற்கு ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆறுதல் தெரிவித்தார்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஈஷா யோகா மைய ஆன்மீக சுற்றுலாவுக்கு சென்று விட்டு மதுரை செல்லும் வழியில் தாராபுரம் புறவழிச்சாலை அமராவதி ஆற்றில் குளிக்கச் சென்று சின்னகருப்பு, பாக்கியராஜ், ஹரி ஆகிய மூன்று பேர் பாறை இடுக்குகளில் சிக்கி உயிர் இழந்தனர்.



உயிரிழந்த மூன்று பேர்களின் உடல்களை தாராபுரம் தீயணைப்புத் துறையினர் மீட்டெடுத்து ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த துயர சம்பவம் குறித்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.



இந்த நிலையில் உள்ளூரில் இருந்த (தாராபுரம்) ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி சம்பவத்தை கேள்விப்பட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு வந்து உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார் அப்பொழுது, உயிரிழந்த மூன்று பேரின் உறவினர்கள் அமைச்சரின் காலில் விழுந்து கதறி அழுதனர்.

இதனால் கண்கலங்கிய ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி மருத்துவர் அழைத்து பேசினார். அப்போது மூன்று பேர்களின் உடல்களையும் விரைவாக உடற்கூறு ஆய்வு செய்து தரும்படி மருத்துவர்களை வலியுறுத்தினார்.



இறந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்ததுடன் அவர்களுக்கு வேண்டிய உதவியை செய்து கொடுத்தார். அமராவதி ஆற்றில் நீரில் மூழ்கி மூன்று பேர் உயிரிழப்பு சம்பவத்தால் தாராபுரம் அரசு மருத்துவமனை வளாகமே பெரும் சோகமாக காணப்பட்டது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...