தாராபுரத்தில் எம்.ஜி.ஆரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து அதிமுகவினர் மரியாதை

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 107 வது பிறந்தநாளைமுன்னிட்டு, அவரது திருவுருவப்படத்திற்கு அதிமுகவினர், திருப்பூர் புறநகர் மாவட்ட நகர செயலாளர் சி.ராஜேந்திரன் தலைமையில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 107.வது பிறந்தநாள் விழா அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அண்ணாசிலை அருகில் எம்.ஜி.ஆர் திருவுருவப்படத்திற்கு திருப்பூர் புறநகர் மாவட்ட நகர செயலாளர் சி.ராஜேந்திரன் தலைமையில், மாவட்ட கழக பொருளாளர் சின்னப்பன் (எ) பழனிச்சாமி முன்னிலையில் வடக்கு தெரு காமராஜபுரத்திலிருந்து தாரை தப்பட்டை இசை முழக்கத்துடன் உற்சாகமாக பேரணியாக சின்னக் கடைவீதி கடைவீதி பூக்கடை மொக்கை சந்திப்பு வழியாக பழைய நகராட்சி வளாகம் முன்பு எம்.ஜி.ஆர். திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.



பின்னர் அங்கு அதிமுக கட்சி கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளும், அன்னதானமும் வழங்கப்பட்டது.



இதேபோன்று தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் 107 ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் பங்க்கு மகேஷ் தலைமையில் தேவேந்திர தெருவில் எம்.ஜி.ஆரின் 10 ஆடி திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.



இதன் தொடர்ச்சியாக 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.



இதில் அதிமுக கட்சியின் நிர்வாகிகள் இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை அணியினர், மகளிர் அணியினர் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...