கருமலை எஸ்டேட் பகுதியில் 1935 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா

விழாவில் அப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்களாகிய மருத்துவர்கள், நீதியரசர்கள், வழக்கறிஞர்கள், பொறியாளர்கள், காவல்துறை அதிகாரிகள், வங்கி அதிகாரிகள், போக்குவரத்து துறை பணியாளர்கள், ரயில்வே துறை பணியாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டு தங்களது பள்ளிக்கால நினைவுகளை நினைவு கூர்ந்தனர்.


கோவை: வால்பாறை அருகே 1935 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா நடைபெற்றது. கோவை மாவட்டம் வால்பாறை அருகே கருமலை எஸ்டேட் பகுதியில் 1935 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா நடைபெற்றது.



விழாவில் அப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்களாகிய மருத்துவர்கள், நீதியரசர்கள், வழக்கறிஞர்கள், பொறியாளர்கள், காவல்துறை அதிகாரிகள், வங்கி அதிகாரிகள், போக்குவரத்து துறை பணியாளர்கள், ரயில்வே துறை பணியாளர்கள், ராணுவ அதிகாரிகள், தனியார் மற்றும் அரசுத்துறை ஆசிரியர்கள், பேராசிரியர்கள், தொலைத் தொடர்பு துறை பணியாளர்கள், அஞ்சல் துறை அலுவலர்கள், மத்திய மாநில வரித்துறை அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள், தனியார் துறை நிறுவனம் மேலாளர்கள், வணிகர்கள் மற்றும் பல்துறை வல்லுனர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் முன்னாள் ஆசிரியர்களும், முன்னாள் மாணவர்களும், இந்நாள் ஆசிரியர் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டு பழைய நினைவுகளை நினைவுகூர்ந்தனர்.



இவ்விழாவில் கருமலை பள்ளியின் புகை படத்தை அஞ்சல் துறையில் தாபல் தலையாக வெளியிட்டனர். இதை முன்னாள் மாணவர்கள் இந்நாள் மாணவர்களிடம் வழங்கினர்.

விழாவில் முன்னாள் மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள், பேச்சுப்போட்டி, கவிதை போட்டி மற்றும் சிரியவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் முதலானவைகள் நடைபெற்று, ஆசிரியர் மற்றும் முன்னாள் மாணவ மாணவிகளுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. விழா குழு உறுப்பினர்கள் தமிழ்வேந்தன், அன்புசேகர், மாதவன், தெய்வானை, ராஜமார்த்தாண்டன், மகாராஜா, அசோக் குமார், சூசி, ராமதாஸ், பரமசிவம், பிரபு, செந்தில், அன்புராஜ் ஆகியோர்கள் விழாவினை நடத்தினர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...