40 அடி ஆழ கிணற்றில் விழுந்த காட்டு யானை மீட்கப்பட்டு வனப்பகுதிக்குள் அனுப்பப்பட்டது, வனத்துறையின் இந்த முயற்சிக்கு பொதுமக்கள், வன ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம் பாலமலை அருகே உள்ள கோவனூர் என்ற கிராமத்தின் அருகில் செவ்வாய்கிழமை இரவு காட்டு யானை கூட்டம் ஓன்று புகுந்தது. அப்போது அங்கிருந்த பயன்படுத்தப்படாத தோட்டத்து கிணற்றில்  10 வயது மதிக்கதக்க ஆண் யானை தவறி விழுந்தது.

 

இந்நிலையில் யானையின் பிளிறல் சப்தம் கேட்ட அக்கிராம மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் புதன்கிழமை யானையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 40 அடி கிணற்றில் விழுந்த காட்டு யானையை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன, எனினும் இரவு நேரம் ஆனதாலும், மற்ற காட்டு யானை கூட்டம் வந்ததாலும் யானையை மீட்கும் பணியை ஒத்தி வைத்தனர். முதல் உதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து வியாழக்கிழமை காலை 6 மணி முதல் யானையை மீட்கும் பணி துவங்கியது.



வனத்துறையினர், தீயணைப்பு துறையினர் ஆகியோர் இணைந்து யானையை கிணற்றில் இருந்து மீட்கும் பணியை துவங்கினர், மேலும் வனத்துறை மருத்துவர்கள் அசோகன், வியஜராகவன் ஆகியோர் தலைமையில் மருத்துவ குழுவினர் முதலில் யானைக்கு  மயக்க மருந்து செலுத்தினர். பின்னர் கிணற்றின் உள்ளே சென்ற வனத்துறையினர் கிரேன் உதவியுடன் யானையை கட்டி பாதுகாப்பாக மேலே கொண்டு வந்தனர். பின்னர் யானையின் உடலில் ஏற்பட்ட காயங்களுக்கு மருந்துகளும் ஊசிகளும் போடப்பட்டது.யானையின் கால்களில் அடியேதும் படாததால் மீண்டும் வனப்பகுதிக்குள் யானையை அனுப்ப முடிவு செய்த வனத்துறையினர் கட்டப்பட்ட கயிறுகளை அவிழ்த்த உடன் யானை வனப்பகுதிக்குள் ஓடிச்சென்றது. 

இது குறித்து மாவட்ட வன அலுவலர் ராமசுப்பிரமணியன் கூறுகையில் மீட்பு பணி சிறப்பாக நடைபெற்றதாகவும், யானையின் கால்களில் அடி படாததால் மீண்டும் வனப்பகுதிக்குள்ளேயே அனுப்பியதாக கூறிய அவர் தனி குழு அமைக்கப்பட்டு அந்த யானை அதன் கூட்டத்துடன் சேர்க்கப்படும் என தெரிவித்தார். 40 அடி ஆழ கிணற்றில் விழுந்த யானையை 30 மணி நேரத்தில் உயிருடன் மீட்டு வனப்பகுதிக்குள் அனுப்பிய வனத்துறையினருக்கு பொதுமக்கள் விலங்கு நல ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...