தாராபுரத்தில் நகர திமுக சார்பில் பொங்கல் விழா - அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பங்கேற்பு

தாராபுரம் திமுக நகர இளைஞரணி மற்றும் திமுக மகளிர் அணி சார்பாக தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா நகர கட்சி திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் 500பேருக்கு அமைச்சர் கயல்விழி சர்க்கரை பொங்கல் வழங்கினார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நகர திமுக சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு பொங்கல் வைத்த அனைவருக்கும் சமத்துவ பொங்கல் மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.



தாராபுரம் திமுக நகர இளைஞரணி மற்றும் திமுக மகளிர் அணி சார்பாக தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா நகர கட்சி திமுக அலுவலகத்தில் நடைபெற்றது.



திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் பத்மநாபன் தலைமையில், நகரச் செயலாளர் முருகானந்தம் ஏற்பாட்டில், தாராபுரம் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சருமான கயல்விழி செல்வராஜ் முன்னிலையில், திமுக மகளிர் அணி சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து கொண்டாடினர்.



அப்போது அங்கு இருந்த மகளிர் அணி தொண்டர்கள் பொங்கல் பொங்கி வரும் போது குலவை சத்தத்துடன் கும்மி பாட்டும் பாடினர் இதனைத் தொடர்ந்து அமைச்சர் 500க்கும் மேற்பட்டோருக்கு சர்க்கரை பொங்கல் வழங்கினார். அதன் பிறகு அமைச்சர் கயல்விழி செல்வராஜ், திமுகவினர் மற்றும் பொதுமக்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...