குடிநீர் விநியோகம் செய்யக் கோரி ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு

கீரணத்தம் வடக்கு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 100 குடும்பங்களுக்கு கடந்த ஒரு வாரமாக குடிநீர் கிடைக்கவில்லை. புதிதாக நியமிக்கப்பட்ட குடிநீர் விநியோக பணியாளர் முறையாக பணி செய்யவில்லை. மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை: கோவை, கீரணத்தம் வடக்குப் பகுதியில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யக் கோரி அப்பகுதி மக்கள் ஆட்சியரிடம் நேற்று ஜன.18 மனு அளித்தனர்.

இதுகுறித்து கொங்குநாடு அருந்ததியர் முன்னேற்ற பேரவை நிறுவனத் தலைவர் இளங்கோவன் தலைமையில் மக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

"கீரணத்தம் வடக்கு திட்டப் பகுதியில் சுமார் 640 வீடுகள் கொண்ட குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 100 குடும்பங்கள் வசித்து வருகிறோம். இங்கு கடந்த ஓராண்டாக குடிநீர் விநியோகம் செய்துகொண்டிருந்த பணியாளரை நீக்கிவிட்டு வேறு வேறு ஒரு பணியாளரை குடிசை மாற்று வாரியத்தினர் நியமித்துள்ளனர். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நபர் முறையாக குடிநீர் விநியோகம் செய்வதில்லை. இதனால், கடந்த ஒரு வாரமாக குடிநீர் கிடைக்காமல் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகிறோம்.

இதுகுறித்து குடிசை மாற்று வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், இப்பகுதியில் முட்புதர்கள் மண்டிக்கிடப்பதுடன், கழிவுநீர் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் உள்ளன. எனவே, இப்பிரச்னைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், குடிசை மாற்று வாரிய அதிகாரிகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்."

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...