கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் செல்லும் பிரதான சாலையில் குறுந்தாடி என்னும் பகுதியில் இன்று அதிகாலை 3.45 மணியளவில் மண் சரிவு ஏற்பட்டது.

இதனால், குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் வரும் வாகனப் போக்குவரத்தும், மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் செல்லும் வாகனப் போக்குவரத்தும் சுமார் மூன்று மணிநேரம் ஸ்தம்பித்தது.

மண்சரிவு குறித்த தகவலறிந்த குன்னூர் கோட்டாட்சியர் சீதா பிரியா மற்றும் வருவாய் துறை அலுவலர் வசந்த் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதைத்தொடர்ந்து, மலைப்பாதையில் ஏற்பட்டுள்ள மண்சரிவினை அகற்றும் பணியில் ஈடுபட்ட தீயனைப்புத் துறையினர் ஜேசிபி இயந்திரத்தின் மூலம் சாலையில் இருந்த மண்களை அகற்றினர். இதைத்தொடர்ந்து, அப்பகுதியில் போக்குவரத்து சீரடைந்தது.
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், கடந்த ஒரு வாரத்திற்கு மூன்பு தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மேலாக குன்னூர், நீலகிரி, உதகை உட்பட்ட பகுதிகளில் மழை பெய்தது. அதனைத்தொடர்ந்து நிலவிவந்த வெயிலின் காரணமாக மண்ணின் ஈரம் உறிஞ்சப்பட்டதால் தற்போது இவ்வாறான மண் சரிவு ஏற்பட்டுள்ளது' என்றனர்.
முன்னதாக, மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டிருந்த நிலையில் அப்பகுதியில் எவ்வித வாகனங்களும் கடக்காததால் பெரிய அளவிலான உயிர்சேதம் மற்றும் பொருட்சேதங்கள் தடுக்கப்பட்டுள்ளது.

இதனால், குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் வரும் வாகனப் போக்குவரத்தும், மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் செல்லும் வாகனப் போக்குவரத்தும் சுமார் மூன்று மணிநேரம் ஸ்தம்பித்தது.

மண்சரிவு குறித்த தகவலறிந்த குன்னூர் கோட்டாட்சியர் சீதா பிரியா மற்றும் வருவாய் துறை அலுவலர் வசந்த் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதைத்தொடர்ந்து, மலைப்பாதையில் ஏற்பட்டுள்ள மண்சரிவினை அகற்றும் பணியில் ஈடுபட்ட தீயனைப்புத் துறையினர் ஜேசிபி இயந்திரத்தின் மூலம் சாலையில் இருந்த மண்களை அகற்றினர். இதைத்தொடர்ந்து, அப்பகுதியில் போக்குவரத்து சீரடைந்தது.
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், கடந்த ஒரு வாரத்திற்கு மூன்பு தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மேலாக குன்னூர், நீலகிரி, உதகை உட்பட்ட பகுதிகளில் மழை பெய்தது. அதனைத்தொடர்ந்து நிலவிவந்த வெயிலின் காரணமாக மண்ணின் ஈரம் உறிஞ்சப்பட்டதால் தற்போது இவ்வாறான மண் சரிவு ஏற்பட்டுள்ளது' என்றனர்.
முன்னதாக, மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டிருந்த நிலையில் அப்பகுதியில் எவ்வித வாகனங்களும் கடக்காததால் பெரிய அளவிலான உயிர்சேதம் மற்றும் பொருட்சேதங்கள் தடுக்கப்பட்டுள்ளது.