குன்னூர்- மேட்டுப்பாளையம் இடையே மண்சரிவு காரணமாக போக்குவரத்து பாதிப்பு

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் செல்லும் பிரதான சாலையில் குறுந்தாடி என்னும் பகுதியில் இன்று அதிகாலை 3.45 மணியளவில் மண் சரிவு ஏற்பட்டது. 



இதனால், குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் வரும் வாகனப் போக்குவரத்தும், மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் செல்லும் வாகனப் போக்குவரத்தும் சுமார் மூன்று மணிநேரம் ஸ்தம்பித்தது.



மண்சரிவு குறித்த தகவலறிந்த குன்னூர் கோட்டாட்சியர் சீதா பிரியா மற்றும் வருவாய் துறை அலுவலர் வசந்த் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதைத்தொடர்ந்து, மலைப்பாதையில் ஏற்பட்டுள்ள மண்சரிவினை அகற்றும் பணியில் ஈடுபட்ட தீயனைப்புத் துறையினர் ஜேசிபி இயந்திரத்தின் மூலம் சாலையில் இருந்த மண்களை அகற்றினர். இதைத்தொடர்ந்து, அப்பகுதியில் போக்குவரத்து சீரடைந்தது.

இதுகுறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், கடந்த ஒரு வாரத்திற்கு மூன்பு தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மேலாக குன்னூர், நீலகிரி, உதகை உட்பட்ட பகுதிகளில் மழை பெய்தது. அதனைத்தொடர்ந்து நிலவிவந்த வெயிலின் காரணமாக மண்ணின் ஈரம் உறிஞ்சப்பட்டதால் தற்போது இவ்வாறான மண் சரிவு ஏற்பட்டுள்ளது' என்றனர்.

முன்னதாக, மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டிருந்த நிலையில் அப்பகுதியில் எவ்வித வாகனங்களும் கடக்காததால் பெரிய அளவிலான உயிர்சேதம் மற்றும் பொருட்சேதங்கள் தடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...