கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பொள்ளாச்சி நகராட்சியில் மருத்துவ காப்பீட்டு திட்ட முகாம்

முகாமில் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தில் சேர்த்தல், இலவச மருத்துவ உதவி திட்டம் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைத்து கடன் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு விண்ணப்பங்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன.


கோவை: பொள்ளாச்சி நகராட்சி 26, 31, 32 வார்டுக்கு உட்பட்ட பககுதியில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட முகாம் நடைபெற்றது. கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வார்டு வாரியாக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட முகாம் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக பத்ரகாளியம்மன் கோவில் வீதியில் உள்ள ஜெயசூர்யா மண்டபத்தில் 26, 31, 32வார்டு பகுதிக்கான முகாம் நடைபெற்றது. இந்த முகாமை நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். முகாமில் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தில் சேர்த்தல், இலவச மருத்துவ உதவி திட்டம் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைத்து கடன் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு விண்ணப்பங்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது.

இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் திமுக நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன், நகர மன்ற உறுப்பினர் பெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...