காங்கேயம் அருகே சிவன்மலை சுப்பிரமணிய சாமி கோவிலில் தைப்பூச தேர் விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

தேர்த் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 26ஆம் தேதி துவங்கி மலையை வலம் வந்து, 28 ஆம் தேதி தேர் நிலையை அடைகிறது. தேர்த் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை சிவன்மலை கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


திருப்பூர்: சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச தேர்த் திருவிழா கொடியேற்றம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேர்த்திருவிழாவை முன்னிட்டு இன்று கொடியேற்றும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கொங்கு மண்டலத்தில் முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் கோவில்களில் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். மேலும் நாட்டில் வேறு எந்த கோவிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பாக இங்குள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டி விளங்குகிறது.

சிவன்மலையில் உள்ள சுப்பிரமணியசாமி கோயிலின் தைப்பூச தேர்த் திருவிழா, கடந்த 17ம் தேதி மலை அடிவாரத்தில் உள்ள வீரகாளியம்மன் கோயிலில் தேர்த் திருவிழாவுடன் துவங்கியது. இதன் பின்னர், இன்று மலைக் கோயிலில் சிறப்பு வழிபாடும், மயில் வாகன அபிஷேகமும் நடைபெற்றது. இன்று மதியம் விநாயகர் வழிபாடும், தொடர்ந்து முருகன் கோயில் சன்னதி முன் உள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது.



பின்னர் சாமி சப்பாரத்தில் மலையை வலம் வந்து மலை அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலுக்கு எழுந்தருளல் பூஜையும் நடைபெற்றது. தொடர்ந்து தினசரி காலை 9 மணிக்கு காலசந்தி பூஜையும், திருக்கோவில் மற்றும் பல்வேறு சமூக மக்களின் சார்பில் மண்டபக்கட்டளையும் நடைபெறும்.

தேர்த் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 26ஆம் தேதி துவங்கி மலையை வலம் வந்து, 28 ஆம் தேதி தேர் நிலையை அடைகிறது. தேர்த் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை சிவன்மலை கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். மேலும் மலை அடிவாரத்தில் தேர்த்திருவிழா கடைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...