கோவை கலிக்கநாயக்கன்பாளையத்தில் லஞ்சம் வாங்கிய காவலர் ஆயுதப் படைக்கு மாற்றம்

பொங்கல் விழாவில் பாதுகாப்புப் பணியில் இருந்த தொண்டாமுத்தூர் காவல் நிலைய தலைமைக் காவலர் மணிகண்டன் என்பவா் மேடையில் இருந்த ஒருவரை அழைத்து விழாவின் பாதுகாப்புக்கு வந்துள்ள தனக்கு ரூ.1,000 வழங்க வேண்டும் என்று கேட்டு வாங்கியதால், அவர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


கோவை: கோவை கலிக்கநாயக்கன்பாளையத்தில் அப்பகுதி மக்கள் சார்பில் கடந்த 3 நாள்களுக்கு முன்பு பொங்கல் விழா மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த தொண்டாமுத்தூர் காவல் நிலைய தலைமைக் காவலா் மணிகண்டன் என்பவா் மேடையில் இருந்த ஒருவரை அழைத்து விழாவின் பாதுகாப்புக்கு வந்துள்ள தனக்கு ரூ.1,000 வழங்க வேண்டும் என்று கேட்டதாகத் தெரிகிறது.

இதையடுத்து, காவலா் மணிகண்டன் கேட்ட ரூ.1,000ஐ பொதுமக்கள் வழங்கினா். இதை அங்கிருந்த ஒருவா் கைப்பேசியில் விடியோ எடுத்துள்ளார். இதைத் தொடா்ந்து, மணிகண்டன் லஞ்சம் வாங்கிய விடியோ ஆதாரங்களுடன் அப்பகுதி மக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சனிக்கிழமை நேற்று (ஜன.20) புகார் மனு அளித்தனர்.

அப்போது, அங்கிருந்த காவல் துறை அதிகாரிகள், தலைமைக் காவலர் மணிகண்டனை ஆயுதப் படைக்கு பணியிட மாற்றம் செய்து ஏற்கெனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளதாகக் கூறினர். அவா் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதால் பொதுமக்கள் தங்களிடமிருந்த விடியோ ஆதாரத்தை போலீஸாரிடம் வழங்கிவிட்டுச் சென்றனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...