வீடுகளில் தீபங்களை ஏற்றி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை கொண்டாடுவோம் - வானதி சீனிவாசன் வேண்டுகோள்

நாம் கார்த்திகை தீபத்தன்று நூற்றுக்கணக்கான தீபங்களை ஏற்றி கொண்டாடுவது போல இந்த தீபங்களை ஏற்றி நாம் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை கொண்டாடுவோம் என்று சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.


கோவை: கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜனவரி 22-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் உள்ள ராம பக்தர்கள் மற்றும் கோயில் நிர்வாகம் ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்வை பார்ப்பதற்காக ஏற்பாடுகள், அன்னதானம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதை நேற்று முதல் தமிழக அரசு காவல்துறை வாயிலாக மிரட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். இதற்காக ராம பக்தர்கள் கொதித்துப் போய் இருக்கிறார்கள். இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சி மகளிர்களுக்கு மட்டுமில்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும் நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்.

அதன்படி பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ராமர் கோயில் கும்பாபிஷேக நாளிலே அனைவரது வீட்டிலும் விளக்கேற்றி கொண்டாட சொல்லி இருக்கிறார். தமிழக அரசு, பக்தர்களின் உணர்வுகளை மதிக்காமல் இவ்வாறு மிரட்டுகின்ற பொழுது, நாம் அனைவரும் நமது ராம பக்தியை காட்டுவதை மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும்.

அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் 5 விளக்குகளை ஏற்றச் சொல்லி இருக்கிறார் பிரதமர். நாம் கார்த்திகை தீபத்தன்று நூற்றுக்கணக்கான தீபங்களை ஏற்றி கொண்டாடுவது போல இந்த தீபங்களை ஏற்றி நாம் கொண்டாடுவோம் என்று கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...