கோவைப்புதூரில் புதிய இந்தியன் வங்கி கிளை துவக்கம்

இந்தியன் வங்கியின் இந்தியாவில் 2655-வது கிளையும், கோவை மண்டலத்தில் 88-வது கிளையுமாக புதிய இந்தின் வங்கிக் கிளையினை கோவைப்புதூரில் இன்று கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழி ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.



இதில் இவ்வங்கியின் மண்டல மேலாளர் ஏ.கணேசராமன், துணை மண்டல மேலாளர் பி.ஜேம்ஸ் தாமஸ், கிளை மேலாளர் ஆர்.அபிநவ் சந்தர், ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்களின் முதன்மை நிர்வாக அதிகாரி கி.சுந்தரராமன், பொதுமேளாலர் லெட்சுமிபதி மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



இதில் மண்டல மேலாளர் ஏ.கணேசராமன் பேசுகையில், வங்கிகள் வளர அதன் நம்பகத்தன்மை, சேவை செய்யும் முறை மிகவும் முக்கியமாகும். பராம்பரியமான வங்கிகள் இன்றும் மக்கள் மத்தியில் உள்ளது.

கோவை மண்டலத்தில் இந்தியன் வங்கி 3000 கோடிகள் வர்த்தகம் ரீடையில் துறையில் நடைபெற்று வருகிறது. அதேபோன்று விவசாயத்துறையில் 700 கோடி வரை வர்த்தகம் இந்தியன் வங்கியில் இம்மண்டலத்தில் நடைபெற்று வருகிறது.

இம்மண்டலத்தில் டெக்ஸ்டைல் துறை வர்த்தக பரிமாற்றத்தில் குறிப்பிடும்படியாக உள்ளது. ஆனால் விவசாயத்துறை மிகவும் கவனிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது. குறிப்பாக ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் விவசாய வர்த்தகம் வழக்கம் போல் நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டத்தில் இதனை உயர்த்த இந்தியன் வங்கி செயல்பட முனைப்புடன் உள்ளது. மேலும் இம்மண்டலத்தில் இவ்வங்கி கோழிப்பண்னை வளர்ச்சியில் அதிகம் கவனம் செலுத்த உள்ளது.

ரியல் எஸ்டேட் துறை மிகவும் குறைந்து வங்கி வர்த்தக பரிமாற்றதில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. கோவைப்புதூர் கோவையில் வளர்ந்து வரும் பகுதியாக திகழ்கிறது. அதனால் இங்கு இப்புதிய கிளையினை தொடங்கியுள்ளோம் எனக் கூறினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...