வால்பாறை அருகே தேயிலைத்தோட்டத்தில் புகுந்த காட்டு யானைகளால் தேயிலை பறிக்கும் தொழில் பாதிப்பு

டுமலை எஸ்டேட் பகுதியில் காலையில் தேயிலை தோட்டத்தில் வேலை செய்ய தொழிலாளர்கள் சென்றபோது,தோட்டத்தில் ஆறு காட்டு யானைகள் குட்டியுடன் உள்ளதைப்பார்த்து தொழிலாளர்கள் அச்சமடைந்தனர். பின்னர், வந்த வனத்துறையினர் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளது. காட்டு யானைகள் கூட்டமாகவும், தனியாகவும் சுற்றி வருகிறது. கால சூழ்நிலை மாற்றத்தால் காட்டு யானைகள் வால்பாறை பகுதியில் இருந்து கேரளா வனப் பகுதிக்கு இடம்பெயர்ந்து வருகிறது.

இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள நடுமலை எஸ்டேட் பகுதியில் காலை தேயிலை தோட்டத்தில் வேலை செய்ய தொழிலாளர்கள் சென்றுள்ளனர். அப்பொழுது தேயிலை தோட்டத்தில் ஆறு காட்டு யானைகள் குட்டியுடன் இன்று உள்ளது. தொழிலாளர்கள் அச்சத்தில் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து வனத்துறையினர் அப்பகுதிக்கு வந்து காட்டு யானைகளை அருகில் இருக்கும் வனப்பகுதிக்குள் விரட்டினார்.

தொழிலாளர்கள் ஒரு மணி நேரம் தாமதமாக தேயிலை பறிக்கும் வேலையை ஆரம்பித்தனர். காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். வனத்துறையினர் இந்தப்பகுதியில் பாதுகாப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...