பொள்ளாச்சியில் மரக்கன்றுகள் வழங்கி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாள் கொண்டாட்டம்

பொள்ளாச்சி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை சார்பில் புதிய பேருந்து நிலையம் முன்பு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அவரின் உருவப்படத்திற்கு பொள்ளாச்சி நகர மன்ற உறுப்பினர் சியாமளா நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.


கோவை: சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 127 வது பிறந்த நாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை சார்பில் புதிய பேருந்து நிலையம் முன்பு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் திரு உருவப்படத்திற்கு பொள்ளாச்சி நகர மன்ற உறுப்பினர் சியாமளா நவநீதகிருஷ்ணன், பொள்ளாச்சி நகர அதிமுக செயலாளர் கிருஷ்ணகுமார், எம்ஜிஎம் கல்லூரியின் முதல்வர் முத்துக்குமரன் உள்ளிட்ட திமுக, அதிமுக, மதிமுக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செய்தனர். என்.ஜி.எம் கல்லூரி வரலாற்று துறை மாணவ, மாணவிகளுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் மரக்கன்றுகளும், இனிப்புகளும் வழங்கப்பட்டது.



தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவையின் தலைவர் வெள்ளை நட்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் செயலாளர் மணிகண்டன், துணை செயலாளர் அமுதன், பொருளாளர் சுபீர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...