நிலங்களுக்கு இழப்பீடு கேட்டு புளியம்பட்டியில் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு சந்தை மதிப்பில் நிவாரண வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள தொகையை உடனடியாக வழங்க வேண்டும். நிலம் கொடுத்து வழித்தடம் இல்லாமல் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று விவசாய சங்கத்தினர் வலியுறுத்தினர்.


கோவை: நாகர்கோவில்-திண்டுக்கல்-கோவை வரை தேசிய நெடுஞ்சாலை பைபாஸ் சாலை அமைக்க விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு சந்தை மதிப்பில் நிவாரண வழங்க வேண்டும். நிழவையில் உள்ள தொகையை உடனடியாக வழங்க வேண்டும். நிலம் கொடுத்து வழித்தடம் இல்லாமல் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பொள்ளாச்சி பல்லடம் சாலை புளியம்பட்டியில் தமிழ்நாடு விவசாய சங்க சார்பில் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

தமிழ்நாடு விவசாய சங்கத்தைச் சேர்ந்த அப்பாவு ரங்கநாதன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் மதுசூதனன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கோஷமிட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் கோவை மாவட்ட செயலாளர் பழனிச்சாமி, செயலாளர் ஸ்டாலின் பழனிச்சாமி, புளியம்பட்டி கிளை செயலாளர் பரமசிவம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...