பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணைகள் கட்டுவதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் போதுமான ஆதாரங்களை கொடுத்து, முறையாக வழக்கு நடத்தி தடையாணை பெற தவறிவிட்டதாக பவானி தடுப்பணை தடுப்பு குழுவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவதை தடுத்து நிறுத்துவது தொடர்பாக, கோவை காந்திபுரம் பகுதியில் பவானி தடுப்பணை தடுப்பு குழு ஆலோசணைக்கூட்டம் நடைபெற்றது.
இதில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், தி மு க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்கள் உட்பட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பவானி தடுப்பணை தடுப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் கு.இராமகிருட்டிணன், கேரள அரசு தடுப்பணைகள் கட்டுவதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் போதுமான ஆதாரங்களை கொடுத்து முறையாக வழக்கு நடத்தி தடையாணை பெற தவறிவிட்டதாக குற்றம்சாட்டினார்.
மேலும் தடுப்பணை கட்ட தடையாணை பெறாத காரணத்தினால் கேரள அரசு மேலும் தடுப்பணைகள் கட்ட வாய்ப்பாக அமைந்து இருப்பதாகவும், இதன் காரணமாக கோவை உள்ளிட்ட 3 மாவட்டங்கள் பாதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்து தடுப்பணைகள் கட்டுவதற்கு தடையாணை பெற வேண்டுமெனவும் வலியுறுத்திய அவர், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பில் பவானி ஆற்றில் கேரள அரசு தண்ணீர் எடுக்க எந்தவித வரையறையும் இல்லாத நிலையில், கேரள அரசு தண்ணீர் எடுக்க அனுமதிக்கக்கூடாது என தெரிவித்தார்.
பவானி தடுப்பணை விவகாரத்தில் முறையாக வழக்கு நடத்தாத தமிழக அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும் வருகின்ற 30-ம் தேதி கோவையில் அனைத்து கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக கு.இராமகிருட்டிணன் அறிவித்தார்.
மேலும் இந்த விவாகரம் தொடர்பாக பவானி தடுப்பணை தடுப்பு குழுவினர் ஏப்ரல் முதல்வாரத்தில் கேரள முதலமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவதை தடுத்து நிறுத்துவது தொடர்பாக, கோவை காந்திபுரம் பகுதியில் பவானி தடுப்பணை தடுப்பு குழு ஆலோசணைக்கூட்டம் நடைபெற்றது.
இதில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், தி மு க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்கள் உட்பட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பவானி தடுப்பணை தடுப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் கு.இராமகிருட்டிணன், கேரள அரசு தடுப்பணைகள் கட்டுவதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் போதுமான ஆதாரங்களை கொடுத்து முறையாக வழக்கு நடத்தி தடையாணை பெற தவறிவிட்டதாக குற்றம்சாட்டினார்.
மேலும் தடுப்பணை கட்ட தடையாணை பெறாத காரணத்தினால் கேரள அரசு மேலும் தடுப்பணைகள் கட்ட வாய்ப்பாக அமைந்து இருப்பதாகவும், இதன் காரணமாக கோவை உள்ளிட்ட 3 மாவட்டங்கள் பாதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்து தடுப்பணைகள் கட்டுவதற்கு தடையாணை பெற வேண்டுமெனவும் வலியுறுத்திய அவர், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பில் பவானி ஆற்றில் கேரள அரசு தண்ணீர் எடுக்க எந்தவித வரையறையும் இல்லாத நிலையில், கேரள அரசு தண்ணீர் எடுக்க அனுமதிக்கக்கூடாது என தெரிவித்தார்.
பவானி தடுப்பணை விவகாரத்தில் முறையாக வழக்கு நடத்தாத தமிழக அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும் வருகின்ற 30-ம் தேதி கோவையில் அனைத்து கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக கு.இராமகிருட்டிணன் அறிவித்தார்.
மேலும் இந்த விவாகரம் தொடர்பாக பவானி தடுப்பணை தடுப்பு குழுவினர் ஏப்ரல் முதல்வாரத்தில் கேரள முதலமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.