வடுகபாளையத்தில் மது போதையில் அதிவேகமாக காரை இயக்கிய நபரின் செல்போனை பறித்ததால் சாலையில் படுத்து அட்டகாசம்

மதுபோதையில் அதிவேகமாக காரை இயக்கிய காரணத்தால், செல்போனை பறித்துக் கொண்டு போலீசார் தராததால் ஆத்திரமடைந்த அந்த போதை ஆசாமி, பல்லடம்-பொள்ளாச்சி சாலையில் படுத்துக்கொண்டு அட்டகாசம் செய்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வடுகபாளையத்தில் அதிவேகமாக மது போதையில் காரை இயக்கி சாலையில் செல்லும் மற்ற வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சென்றதாக கூறி பாதிக்கப்பட்ட இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் அதிவேகமாக காரை இயக்கிய நபரின் செல்போனை பிடுங்கி வைத்ததாக கூறப்படுகிறது.

மேலும் மது போதையில் காரில் வந்த நபர் அந்த இருசக்கர வாகன ஓட்டியிடம் தகராறில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.



இதையடுத்து அங்கு விரைந்து சென்ற பல்லடம் போலீசார் ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.



மேலும் செல்போனை பறித்துக் கொண்டு தராததால் ஆத்திரமடைந்த அந்த போதை ஆசாமி பல்லடம்-பொள்ளாச்சி சாலையில் படுத்துக்கொண்டு அட்டகாசம் செய்துள்ளார். மேலும் அங்கு வந்த போதை ஆசாமியின் நண்பர்கள் அந்த இருசக்கர வாகன ஓட்டியை தகாத வார்த்தைகளால் திட்டியும், அடிக்கவும் முயன்றுள்ளனர்.



இதனையடுத்து போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி பல்லடம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதனிடையே போதை ஆசாமி சாலையில் படுத்து அட்டகாசம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் பல்லடம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...