கொள்ளுபாளையம் கிராமத்தில் கால்நடை மலடு நீக்க மருத்துவ சிகிச்சை முகாம்

முகாமில், 30க்கும் மேற்பட்ட கறவை மாடு வளர்க்கும் விவசாயிகள் கலந்து கொண்டு கறவை பசுக்களுக்கு மலடு நீக்க சிகிச்சையில் பங்கேற்று பயனடைந்தனர். பின்னர் விவசாயிகளுக்கு தானுவாசு தாது உப்பு மற்றும் கால்நடை பராமரிப்பு துறை குறித்து விளக்க கையேடுகள் கால்நடை மருத்துவக் கல்லூரி சார்பில் வழங்கப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள குடிமங்கலம் அருகே கொள்ளுபாளையம் கிராமத்தில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் கால்நடை மலடு நீக்க மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர் முனைவர் குமாரவேல் தலைமை தாங்கினார். முகாமில் ஈனியல் துறை தலைவர் செந்தில்குமார், இணை பேராசிரியர் வீணா, உதவி பேராசிரியர் மருத்துவர் கல்யாண், அறுவை சிகிச்சை துறை தலைவர் முனைவர் சிவசங்கர், கால்நடை உணவியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் பாலமுருகன் மற்றும் விரிவாக்கத்துறை பேராசிரியர்கள் கலந்து கொண்டு விவசாயிகளுடன் கலந்துரையாடல் மற்றும் மலடு நீக்க சிகிச்சை முகாம் குறித்து விளக்கம் அளித்தனர்.

30க்கும் மேற்பட்ட கறவை மாடு வளர்க்கும் விவசாயிகள் கலந்து கொண்டு கறவை பசுக்களுக்கு மலடு நீக்க சிகிச்சை முகாம் நடைப்பெற்றது. பின்னர் விவசாயிகளுக்கு தானுவாசு தாது உப்பு மற்றும் கால்நடை பராமரிப்பு துறை குறித்து விளக்க கையேடுகள் கால்நடை மருத்துவக் கல்லூரி சார்பில் வழங்கப்பட்டன.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...