வடமதுரை விருந்தீஸ்வரர் கோவிலில் தைப்பூசத் திருவிழாவின் இரண்டாம் நாளில் வள்ளிக் கும்மி நிகழ்ச்சி

தொடர்ந்து 50 ஆண்டுகள் தைப்பூசத் திருவிழாவை நடத்தி வரும் திருச்செந்தூர் திருமுருகன் இறை வழிபாடு மன்றம் வடமதுரை விருதுஸ்வரர் கோவில் திருப்பணி குழு தலைவரும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், முன்னாள் கோவை புறநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவருமான P.V மணிக்கு இறை பணியை பாராட்டி பரிவட்டம் கட்டி பாராட்டு விழா மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.


கோவை: கோவை துடியலூரை அடுத்த வடமதுரை விருந்தீஸ்வரர் திருக்கோவிலில் திருச்செந்தூர் திருமுருகன் இறை வழிபாடு மன்றம் சார்பில் கடந்த 50 ஆண்டுகளாக ஆண்டு தோறும் தைப்பூசத் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொன்விழா ஆண்டான இந்த ஆண்டு தைப்பூசத் திருவிழா திருச்செந்தூர் திருமுருகன் இறை வழிபாடு மன்றம் வடமதுரை விருதுஸ்வரர் கோவில் திருப்பணி குழு தலைவரும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், முன்னாள் கோவை புறநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவருமான P.V மணி தலைமையில் நடைபெற்று வருகிறது.



இரண்டாம் நாளில் 100 க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக விருந்தீஸ்வரர் திருக்கோவிலை வந்து ஜமாப் இசைக்கு ஏற்ப நடனமாடினர்.



தொடர்ந்து பரத நாட்டியத்துடன் தொடங்கிய வள்ளிக் கும்மி நிகழ்ச்சியில் 120 க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் மற்றும் ஆண்கள் ஒரே மாதிரியான உடையணிந்து வள்ளி கும்மி நடனமாடி அசத்தினர்.



முன்னதாக வள்ளி கும்மி நிகழ்ச்சியை சிறப்பு விருந்தினராக வந்திருந்த திமுக மாவட்டச் செயலாளர் தொண்டாமுத்தூர் அ.ரவி குத்துவிளக்கு ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து 50 ஆண்டுகள் தைப்பூசத் திருவிழாவை நடத்தி வரும் திருச்செந்தூர் திருமுருகன் இறை வழிபாடு மன்றம் வடமதுரை விருதுஸ்வரர் கோவில் திருப்பணி குழு தலைவரும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், முன்னாள் கோவை புறநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவருமான P.V மணிக்கு இறை பணியை பாராட்டி பரிவட்டம் கட்டி பாராட்டு விழா மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும் வள்ளி கும்மி ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் ஏற்பாட்டாளர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் குருடம்பாளையம் ஊராட்சித் தலைவர் டி.ரவி, மாவட்ட கவுன்சிலர் கார்த்திக், துடியலூர் டியூகாஸ் முன்னாள் துணைத் தலைவர் ஆர் செல்வராஜன், இந்திய தேசிய காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.சுரேஷ் குமார், பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத் தலைவர் P.D மோகன்ராஜ் வட்டார நிர்வாகிகள் ஆர்டிஓ பழனிசாமி சூர்யா, வெள்ளிங்கிரி, தம்பி பார்த்திபன், எல்.எம் டபிள்யூ அசோகன், கூடலூர் பழனிசாமி, வெங்கடசாமி, எக்ஸ் கவுன்சிலர், கூடலூர் இன்ஜினியர், விக்னேஸ்வரன், வசந்தகுமார், அருணா நகர் சண்முகசுந்தரம், வேல்முருகன், சேகர், சுந்தரம், ஊர் கவுண்டர் செல்வராஜ், ரவிச்சந்திரன், வேலுசாமி, ஊர் கவுண்டர் வடமதுரை ஜமாப் ரவி, குணசேகரன், இளைஞரணி பிரபு, கே.கே டிராவல்ஸ் ஜெயக்குமார், அன்பு, குமார்கன்னிமடை பாலசுப்பிரமணியம், காளவாய் ரங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...