தேசிய வாக்காளர் தினம் - கோவையில் பள்ளி, கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி

வாக்களிப்பதன் அவசியம் குறித்து நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பிரச்சார பேரணியை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


கோவை: தேசிய வாக்காளர் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் நாடு முழுவதும் வாக்காளர்களுக்கு பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வாக்களிப்பது அவசியம், எதற்காக வாக்களிக்கிறோம் என்பது குறித்து எல்லாம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த ஆண்டு தேசிய வாக்காளர் தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது.



அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் காந்தி குமார் பாடி தலைமையில் வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் கொடியசைக்கு தொடக்கி வைத்தார்.



அதனை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.



அதனை தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பிரச்சார பேரணியை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.



இந்த விழிப்புணர்வு பிரச்சார பேரணியானது கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி, மாநகர காவல் ஆணையாளர் அலுவலகம், அண்ணா சிலை வ உ சி மைதானம் சென்று மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தடைந்தது.



இந்த பேரணியில் கலந்து கொண்ட மாணவ, மாணவியர் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கைகளில் ஏந்திய படி செல்லும் வழியில் பொதுமக்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்து விளக்கினர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...