தி.மு.க ஆட்சியில் பத்திரிகையாளர் உயிருக்கே அச்சுறுத்தல் - பா.ஜ.க தேசிய மகளிர் தலைவி வானதி சீனிவாசன் கண்டனம்

சமூக விரோதிகளால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக புகார் அளித்தும் காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க தவறியுள்ளது. பத்திரிகையாளர் ஒருவரின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் வகையில் தான் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு நிலைமை உள்ளது என சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் புகார் தெரிவித்துள்ளார்.


கோவை: சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதியைச் சேர்ந்த, 'நியூஸ் 7 தமிழ்' செய்தி தொலைக்காட்சியின் செய்தியாளர் நேசபிரபு என்பவர் நேற்று இரவு (ஜனவரி 24) அவரது வீட்டுக்கு அருகிலேயே சமூக விரோத கும்பலால் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. பல்லடம் பகுதியில் நடக்கும் சமூக விரோதச் செயல்களை தனது செய்திகள் மூலம் தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்ததால் நேசபிரபு தாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சமூக விரோதிகளால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக புகார் அளித்தும் காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க தவறியுள்ளது. பத்திரிகையாளர் ஒருவரின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் வகையில் தான் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு நிலைமை உள்ளது. திமுக அரசை விமர்சித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டால் நள்ளிரவில் பெரும் படையுடன் வீட்டு சுவர் ஏறி கைது செய்கிறது காவல் துறை.

ஆனால், கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் வன்கொடுமைகள், கனிமவள கொள்ளை என கொடிய குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை காவல் துறை கண்டுகொள்வதில்லை. இதற்கு திமுகவினரால் காவல் துறையினர் கைகள் கட்டப்பட்டிருப்பதே காரணம். எனவே, நேசபிரபுவை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்து தண்டனை வழங்க வேண்டும். நேசபிரபுவுக்கு தமிழ்நாடு அரசு உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...