கிளாசிக் போலோ-வின் புதிய 'க்ரீன் பேக்'

கோவை மாநகரில் விரைவில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட உள்ள நிலையில், கிளாசிக் போலோ ஆடையகம் சார்பில் இயற்கை முறையில் தயாரித்த பைகள் அறிமுகமாகின்றன. முழுக்க முழுக்க இயற்கை பொருட்களால் ஆன துணிப்பைகளை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கவுள்ள நிலையில் இதற்கான அறிமுக விழா நாளை, 'மை ஷாப்பிங் மை பேக்' கண்காட்சியில் நடைபெற உள்ளது. 



இது குறித்து கிளாசிக் போலோ ஆடையகத்தை கோவை மாவட்டத்தில் தனி உரிமை எடுத்திருக்கும் ரதிஸ் குமார் கூறியதாவது:-

நாங்கள் அறிமுகப்படுத்த உள்ள பயோ க்ரேடபில் துணிப்பைகள் பிளாஸ்டிக் கலப்படம் இன்றி முழுக்க முழுக்க இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டவையாகும். இந்த பைகளை 'ட்ரு க்ரீன்' என்ற நிறுவனம் எங்களுக்கு தயாரித்து வழங்குகிறது. 

சோளம், உணவுபொருட்கள் மற்றும் நார் பொருட்களின் பாக்டீரியாக்களில் இருந்து தயாரிக்கப்படும் இந்த பைகள் சுற்றுச்சூழலை எந்த வகையிலும் பாதிக்காது.

மேலும், இந்த க்ரீன் பேக் குறைந்தபட்சம் சில நாட்களுக்கு பிறகு தானாக மக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. நாளை (சனிக்கிழமை) இந்த புதிய துணிப்பையை கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன்  முன்னிலையில் வெளியிட இருக்கிறோம்.

கோவை மாவட்டத்தில் இது போன்ற இயற்கை பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் முதல் க்ரீன் பேக் எங்களுடையது என்பதில் பெருமையடைகிறோம்.  இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...