குடியரசு தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தேசிய கொடியேற்றி மரியாதை

சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிகளுக்கு பொன்னாடை மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் அணிவித்து கவுரவித்தார். இதையடுத்து திருப்பூர் மாநகர போலீசில் சிறப்பாக பணியாற்றிய 23 போலீசாருக்கும், மாவட்டத்தில் 39 போலீசாருக்கும் முதலமைச்சர் பதக்கம் வழங்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூரில் குடியரசு தினவிழாவை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தேசியக்கொடி ஏற்றி வைத்து 59 பயனாளிகளுக்கு, ரூ.61.82 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

நாட்டின் 75 வது குடியரசு தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரி மைதானத்தில் குடியரசு தின விழா நடந்தது. இதில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் கலந்து கொண்டு தேசியக்கொடி ஏற்றி வைத்து காவல்துறையினரின் மரியாதை ஏற்றுக் கொண்டார்.

பின்னர் சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிகளுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். இதையடுத்து திருப்பூர் மாநகர போலீசில் சிறப்பாக பணியாற்றிய 23 போலீசாருக்கும், மாவட்டத்தில் 39 போலீசாருக்கும் முதலமைச்சர் பதக்கம் வழங்கப்பட்டது. மேலும் சிறப்பாக பணியற்றிய 298 பேருக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.



இதையடுத்து, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல துறை, வருவாய்த்துறை, மாவட்ட முன்னோடி வங்கி, கூட்டுறவு நலச்சங்கங்கள், வேளாண்மை பொறியியல் துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் 59 பயனாளிகளுக்கு ரூ.61 லட்சத்து 82 ஆயிரத்து 972 நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

தொடர்ந்து பள்ளி மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதே போல் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தேசிய கொடியேற்றி வைத்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...