தைப்பூச தேர்த்திருவிழாவை முன்னிட்டு சிவன்மலை முருகன் கோவிலில் இன்று மாலை தேரோட்டம்

சிவன்மலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு மகா அபிஷேகத்திற்கு பிறகு காலை 7.30 மணிக்கு மகர புஷ்ய நல்வேளையில் சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடன் சுவாமி ரதத்திற்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்துள்ள சிவன்மலையில் உள்ள முருகன் கோயில் தைப்பூச தேர்த் திரு விழாவில் இன்று மாலை தேரோட்டம் நடைபெறவுள்ளது. சுப்பிரமணியர் ரதத்திற்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சிவன்மலை சுப்ரமணியசாமி கோயிலில் தைப்பூசத் தேர்த் திருவிழா மலை அடிவராத்தில் உள்ள வீரகாளியம்மன் கோயில் கொடியேற்றத்துடன் கடந்த 17-ம் தேதி தொடங்கியது.

தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், தேர்த் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட நிகழ்ச்சி இன்று மாலை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு மகா அபிஷேகத்திற்கு பிறகு காலை 7.30 மணிக்கு மகர புஷ்ய நல்வேளையில் சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடன் சுவாமி ரதத்திற்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.



இன்று மாலை 4 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி துவங்குகிறது. தை பூசம் தேர் திருவிழாவின் ஏற்பாடுகளை, இந்தசமய அறநிலையத்துறையினர் செய்துவருகின்றனர். ஏராளமானம் பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுக்க ஆவலுடன் உள்ளனர். இந்த மூன்று நாட்களும் அன்னதானம், பக்தி சொற்பொழிவு, கம்பத்தட்டம், வள்ளி கும்மி ஆட்டம் நிகழ்சிகள் நடைபெறுகிறது.

பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்தி கடன் செலுத்துவார்கள். திருத்தேர் 3 தினங்கள் மலையை வலம் வந்து, ஞாயிறுக்கிழமை தேர்நிலை அடைகிறது. மேலும் தமிழகம் முழுவதிலுமே நேற்று தைப்பூசவிழா துவங்கிய நிலையில் சிவன்மலையில் மட்டுமே இன்று துவங்குகின்றது என்பது கூடுதல் சிறப்பு.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...