விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் பிரச்சனைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
மேலும் பெரிய தடாகம் பகுதியில் சுற்றித் திரியும் குட்டி பெண் யானையை பிடிக்க வேண்டும் என வலியுறுத்தினர். வனவிலங்குகள் விவசாய நிலங்களை நாசம் செய்து வருவதாக குற்றம் சாட்டினர்.
மேலும் விவசாய குறை தீர்ப்பு கூட்டத்திற்கு வனத்துறை அதிகாரிகள் வராமல் விவசாயிகளை வனத்துறையினர் அவமதித்துள்ளதாக விவசாயிகள் கண்டனம் தெரிவித்தனர். வனத்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
மத்திய அரசு அறிவித்துள்ள வறட்சி நிவாரணம் தொகை போதுமானதாக இல்லை எனவும், கூடுதல் நிவாரண தொகை வழங்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்துள்ளதாக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் கந்தசாமி தெரிவித்தார்.
மேலும் பெரிய தடாகம் பகுதியில் சுற்றித் திரியும் குட்டி பெண் யானையை பிடிக்க வேண்டும் என வலியுறுத்தினர். வனவிலங்குகள் விவசாய நிலங்களை நாசம் செய்து வருவதாக குற்றம் சாட்டினர்.
மேலும் விவசாய குறை தீர்ப்பு கூட்டத்திற்கு வனத்துறை அதிகாரிகள் வராமல் விவசாயிகளை வனத்துறையினர் அவமதித்துள்ளதாக விவசாயிகள் கண்டனம் தெரிவித்தனர். வனத்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
மத்திய அரசு அறிவித்துள்ள வறட்சி நிவாரணம் தொகை போதுமானதாக இல்லை எனவும், கூடுதல் நிவாரண தொகை வழங்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்துள்ளதாக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் கந்தசாமி தெரிவித்தார்.