பெரியகவுண்டனூரில் பிளாஸ்டிக், டயர் கழிவுகளை எரிப்பதால் நிலத்தடி தண்ணீர் மாசடைவதாக விவசாயிகள் புகார்

விளை நிலங்களுக்கு நடுவில் கழிவுகளை கொட்டி எரித்து வரும் தனியார் நிறுவனத்தின் மீது ஊராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள பெரியகவுண்டனூர் பகுதியில் விளை நிலங்களுக்கு நடுவில் தனியார் நிறுவனம் ஒன்று பிளாஸ்டிக் மற்றும் டயர் கழிவுகளை குவியலாக கொட்டி வைத்து ஒரு வகையான அமிலத்தை கொண்டு எரித்து சாம்பலாக்கி அதை விற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த கழிவுகள் எரிக்கப்படும் போது ஏற்படும் புகையால் அதைச் சுற்றியுள்ள தென்னை மரங்கள் பாதிக்கப்படுவதோடும், அமிலங்களை ஊற்றி கழிவுகளை எரித்து வருவதால் மண்ணின் சத்துத்தன்மை குறைந்து வருவதோடு நிலத்தடி நீரும் மாசடைந்து வருவதாக அப்பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.



மேலும் அங்குள்ள ஆழ்துளை கிணறு மூலம் வரும் தண்ணீர் மாசடைந்து துர்நாற்றத்துடன் இருப்பதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டினர். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் புகார் தெரிவித்ததையடுத்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அதிரடியாக அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது கழிவுகளைக் கொட்டி எரித்து வருவதற்கு மாசுக்கட்டுபாடு வாரியத்தில் அனுமதி வாங்கப்பட்டதா என்று அந்நிறுவன ஊழியரிடம் மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அந்த நிறுவனத்தைச் சுற்றியுள்ள ஆழ்துளை கிணறில் இருந்து மாசடைந்து வரும் தண்ணீரையும் சோதனைக்காக எடுத்துச் சென்றனர்.

தொடர்ந்து இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்து வந்ததாகவும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் விரைந்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே விலை நிலங்களை காப்பாற்ற முடியும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...