கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் 101 அடி கம்பத்தில் 24 மணி நேரமும் பறக்க கூடிய தேசியக் கொடி ஏற்றம்

குடியரசு தினத்தை முன்னிட்டு ஊர்க்காவல் படையினரின் பணிகளை பாராட்டும் விதமாக கோயமுத்தூர் இன்னல் வீல் கிளப் சார்பாக ஒரு இலட்சம் மதிப்பிலான ரிப்ளக்டர் ஜாக்கெட் எனும் பாதுகாப்பு உடை வழங்கும் விழா கோவை மாநகர காவல் துறை அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.


கோவை: நாட்டின் 75 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் 24மணி நேரமும் பறக்க கூடிய அளவில் 101 அடி கம்பத்தில் தேசியக் கொடியை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஏற்றி வைத்தார். இதனை அடுத்து உள் நாட்டு பாதுகாப்பு பணிகளில், முன்கள பணியாளர்களாக செயல்பட்டு வரும், ஊர்க்காவல் படையினர், திருவிழா, பண்டிகை நேரங்களில் கூட்ட நெரிசல் மிகுந்த இடங்களில், கூட்டத்தை ஒழுங்குபடுத்துவது, கட்சி தலைவர்கள் வருகையின் போதும், அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டத்தின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது போன்ற பணிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு ஊர்க்காவல் படையினரின் பணிகளை பாராட்டும் விதமாக கோயமுத்தூர் இன்னல் வீல் கிளப் சார்பாக ஒரு இலட்சம் மதிப்பிலான ரிப்ளக்டர் ஜாக்கெட் எனும் பாதுகாப்பு உடை வழங்கும் விழா கோவை மாநகர காவல் துறை அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இன்னர் வீல் கிளப் அமைப்பின் தலைவர் புவனா சதீஷ், கோவை மாநகர ஊர்க்காவல் படை உதவி ஆணையர் தேன்மொழி ராஜராம் ஆகியோர் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இதில், கோவை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டார்.



குடியரசு தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற இதில், அலுவலக வளாகத்தில் உள்ள பிரம்மாண்ட தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், சுமார் நூறுக்கும் மேற்பட்ட ஊர்க்காவல் படையினருக்கு ரிப்ளக்டர் ஜாக்கெட்டுகளை வழங்கினார். இரவு நேர பணிகளின் போது ஊர்க்காவல் படையினரின் பாதுகாப்பு கருதி இந்த உடைகள் வழங்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...