வாணவராயர் வேளாண்மை கல்லூரியில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

வேளாண்மை பயிலும் மாணவர்கள் தொழில் திறமையை வளர்த்துக்கொண்டு, புது வகை வேளாண் சார்ந்த தொழில்களில் ஈடுபட வேண்டும் என்று குடியரசு தின விழா உரையில், வாணவராயர் வேளாண்மை கல்லூரியின் முதல்வர் கு.பிரபாகர் கேட்டு கொண்டார்.


கோவை: பொள்ளாச்சி ஆனைமலை வட்டம் வாணவராயர் வேளாண்மை கல்லூரியில் 75 வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடபட்டது. விழாவில் கல்லூரி தேசிய மாணவர் படை பொறுப்பாளர் விஜயகுமார் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் முனைவர் கு.பிரபாகர் தேசிய கொடியை ஏற்றி வைத்து தேசிய மாணவர் படை மற்றும் மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்.

அவர் தனது குடியரசு தின விழா உரையில், வேளாண்மை பயிலும் மாணவர்கள் தொழில் திறமையை வளர்த்துக்கொண்டு, புது வகை வேளாண் சார்ந்த தொழில்களில் ஈடுபட கேட்டு கொண்டார்.



தேசிய மாணவர் படையின் ராணுவம் சார்ந்த நிகழ்ச்சி, மாணவர்களின் பிரமிட் அனைவரையும் கவர்ந்தது. பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் மாவட்ட அளவில் தேசிய வாக்காளர் விழிப்புணர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கி கல்லூரி முதல்வர் முனைவர் கு.பிரபாகர் மற்றும் இயக்குனர் முனைவர் கெம்புசெட்டி கவரவித்தனர். இந்த நிகழ்ச்சிகளை மாணவ மன்ற அலுவலர் ரவிக்குமார் ஒருங்கிணைப்பில் மாணவ மன்ற பொறுப்பாளர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...