திருமணம் செய்ய தடை விதித்த அண்ணனை கொன்ற தங்கை கைது

கோவை செல்வபுரத்தை அடுத்த கல்லாமேடு பகுதியை சேர்ந்தவர் ரேணுகா. இவருக்கு செல்வராஜ் (32) என்ற மகனும், நாகலட்சுமி (23) என்ற மகளும் உள்ளனர். செல்வராஜ் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் வீட்டில் படுத்த படுக்கையாக இருந்தார். குடும்ப சூழலை கருத்தில் கொண்டு ரேணுகா வேலைக்கு சென்று வந்தார்.

நாகலட்சுமி ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர். இந்த நிலையில், நாகலட்சுமி மீண்டும் திருமணம் செய்ய போவதாக செல்வராஜிடம் கூறியதாக தெரிகிறது. இதை செல்வராஜ் எதிர்த்துள்ளார். இதனால் அண்ணன் தங்கை இடையே கடந்த சில தினங்களாக வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.

இன்று காலை வழக்கம் போல ரேணுகா வேலைக்கு சென்றுவிட அண்ணன்- தங்கைக்கு இடையே வாக்குவாதம் அதிகரித்தது. இதனால் ஆத்திரம் அடைந்த நாகலட்சுமி, அவரது அண்ணன் செல்வராஜின் மார்பில் மிதித்துள்ளார். வலியால் துடித்த செல்வராஜின் குரலை கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். இந்நிலையில், செல்வராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுதொடர்பாக, செல்வபுரம் போலீசாருக்கு அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் செல்வராஜின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிச்தனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, நாகலட்சுமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...