கோட்டமங்கலம் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் திமுக ஊராட்சி மன்ற தலைவருடன் பொதுமக்கள் வாக்குவாதம்

பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதையடுத்து, சட்டத்திற்கு புறம்பாக அருகில் உள்ள ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்ட குடிநீர் இணைப்புகள் முறையாக அகற்றப்படும் என்பன உட்பட 22 தீர்மானங்கள் கிராமசபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள கோட்டமங்கலம் ஊராட்சியில் திமுகவைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரம் தலைமையில் குடியரசு தின விழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.



அப்போது ஊராட்சியில் பல்வேறு முறைகேடுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அருகில் உள்ள ஊராட்சிகளுக்கு சட்ட விரோதமாக குடிநீர் இணைப்பு வழங்கி இருப்பது மற்றும் தெருவிளக்கு பராமரிப்பதில் அலட்சியம், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் முறைகேட்டில் ஊராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருவதாக கூறி பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



மேலும் கிராம சபை கூட்டத்திற்கு குறைந்தபட்சம் 100 பேர் இருக்க வேண்டிய நிலையில் குறைந்த அளவு பொதுமக்களை வைத்து கிராமசபை கூட்டத்தை நடத்தக்கூடாது என பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



இறுதியாக சட்டத்திற்கு புறம்பாக அருகில் உள்ள ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்ட குடிநீர் இணைப்புகள் முறையாக அகற்றப்படும் என்பன உட்பட 22 தீர்மானங்கள் கிராமசபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

கிராம சபை கூட்டத்தில் குடிமங்கலம் ஒன்றிய அதிகாரிகள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Newsletter

வானதி சீனிவாசனுக்கு உடல்நலக்குறைவு: கோவை வடக்கில் அண்ணாமலை சூறாவளிப் பிரச்சாரம்

கோவை வடக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு தீவிர பிரச்சாரத்தால் காலில் கடுமையான வீக்கம் ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள்...

ரூ.760 கோடி மதிப்பீட்டில் 1700 கிலோமீட்டர் சாலைகள் அமைக்கப்பட்டது: செந்தில் பாலாஜி

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் செந்தில் பாலாஜி, முதலமைச்சர் Stalin ஆட்சியில் ரூ.760 கோடி மதிப்ப...

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...