பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதையடுத்து, சட்டத்திற்கு புறம்பாக அருகில் உள்ள ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்ட குடிநீர் இணைப்புகள் முறையாக அகற்றப்படும் என்பன உட்பட 22 தீர்மானங்கள் கிராமசபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள கோட்டமங்கலம் ஊராட்சியில் திமுகவைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரம் தலைமையில் குடியரசு தின விழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

அப்போது ஊராட்சியில் பல்வேறு முறைகேடுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அருகில் உள்ள ஊராட்சிகளுக்கு சட்ட விரோதமாக குடிநீர் இணைப்பு வழங்கி இருப்பது மற்றும் தெருவிளக்கு பராமரிப்பதில் அலட்சியம், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் முறைகேட்டில் ஊராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருவதாக கூறி பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் கிராம சபை கூட்டத்திற்கு குறைந்தபட்சம் 100 பேர் இருக்க வேண்டிய நிலையில் குறைந்த அளவு பொதுமக்களை வைத்து கிராமசபை கூட்டத்தை நடத்தக்கூடாது என பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இறுதியாக சட்டத்திற்கு புறம்பாக அருகில் உள்ள ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்ட குடிநீர் இணைப்புகள் முறையாக அகற்றப்படும் என்பன உட்பட 22 தீர்மானங்கள் கிராமசபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
கிராம சபை கூட்டத்தில் குடிமங்கலம் ஒன்றிய அதிகாரிகள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
அப்போது ஊராட்சியில் பல்வேறு முறைகேடுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அருகில் உள்ள ஊராட்சிகளுக்கு சட்ட விரோதமாக குடிநீர் இணைப்பு வழங்கி இருப்பது மற்றும் தெருவிளக்கு பராமரிப்பதில் அலட்சியம், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் முறைகேட்டில் ஊராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருவதாக கூறி பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் கிராம சபை கூட்டத்திற்கு குறைந்தபட்சம் 100 பேர் இருக்க வேண்டிய நிலையில் குறைந்த அளவு பொதுமக்களை வைத்து கிராமசபை கூட்டத்தை நடத்தக்கூடாது என பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இறுதியாக சட்டத்திற்கு புறம்பாக அருகில் உள்ள ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்ட குடிநீர் இணைப்புகள் முறையாக அகற்றப்படும் என்பன உட்பட 22 தீர்மானங்கள் கிராமசபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
கிராம சபை கூட்டத்தில் குடிமங்கலம் ஒன்றிய அதிகாரிகள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.