ஆங்கில சொற்கள் கூறுவதில் உருமாண்டாம்பாளையம் பகுதியை சேர்ந்த ஆறு வயது சிறுவன் புதிய சாதனை

: ஆறே வயதான சிறுவன் லோகித் 52 மற்றும் 46 ஆங்கில எழுத்துக்களை கொண்ட அறிவியல், மருத்துவம், தொல்லியல், ஆங்கில சொற்றொடர் உள்ளிட்ட துறை சார்ந்த 16 ஆங்கில சொற்களை கூறி அசத்தியுள்ளார்.


கோவை: கோவை துடியலூர் மிஸ்டர் தேவ்ஸ் இண்டர்நேஷனல் அகாடமியில் பயிற்சி பெற்று வரும் ஆறு வயது சிறுவன் ஆங்கில சொற்கள் கூறுவதில் புதிய உலக சாதனை படைத்துள்ளார். கோவை உருமாண்டாம்பாளையம் பகுதியை சேர்ந்த ஸ்ரீனிவாசன், ரம்யா ஆகியோரின் மகன் லோகித் ஸ்ரீனிவாசன். ஆறு வயதான சிறுவன் லோகித் இரண்டாம் வகுப்பு படித்து வரும் நிலையில், துடியலூர் பகுதியி்ல் உள்ள மிஸ்டர் தேவ்ஸ் சர்வதேச அகாடமியில் திறன் மேம்பாட்டு பயிற்சியையும் கூடுதலாக பயின்று வருகிறார்.

இந்நிலையில் லோகித்தின் நினைவாற்றல் திறமையை கண்ட அகாடமியின் நிர்வாக இயக்குனரும், பயிற்சியாளருமான தர்ம தேவ் சிறுவனுக்கு தனியாக பயிற்சி அளித்துள்ளார். இதில் சிறுவன் லோகித் 52 மற்றும் 46 ஆங்கில எழுத்துக்களை கொண்ட அறிவியல், மருத்துவம், தொல்லியல், ஆங்கில சொற்றொடர் உள்ளிட்ட துறை சார்ந்த பத்துக்கும் மேற்பட்ட ஆங்கில சொற்களை கூறி அசத்தியுள்ளார்.



குறிப்பாக ஆங்கில எழுத்துக்களை தனித்தனியாக கூறியும், அதே நேரத்தில் முழுமையான சொல்லாகவும், அதன் ஆங்கில பொருளையும் ஐந்து நிமிடம் பதினேழு விநாடிகளில் கூறி அனைவரையும் வியக்க வைத்துள்ளார். சிறுவன் லோகித்தின் இந்த அரிய சாதனை ஆசியா உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது.

சிறுவன் லோகித் இதே போல 200 நாடுகளின் பெயர்களை கூறி ஏற்கனவே ஒரு உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நிலையில்,தற்போது ஆறே மாதத்தில் மீண்டும் ஒரு சாதனை செய்துள்ளது குறிப்பிடதக்கது.

சிறுவன் லோகித்துக்கு மிஸ்டர் தேவ்ஸ் அகாடமியில் பயிற்சி பெற்று வரும் சக மாணவ, மாணவிகள் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் இதில் சிறுவன் லோகித் 52 மற்றும் 46 ஆங்கில எழுத்துக்களை கொண்ட அறிவியல், மருத்துவம், தொல்லியல், ஆங்கில சொற்றொடர் உள்ளிட்ட துறை சார்ந்த 16 ஆங்கில சொற்களை கூறி அசத்தியுள்ளார்.

மேலும், மோனோஅல்ட்ராமிக்ரோஸ் கோபிக்சிலிகோவோல்கானோகோனியோசிஸ் - 46 எழுத்துக்கள்; Aequeosalinocalcalinoceraceoaluminosocupreovitriolic - ஆங்கிலத்தில் 52 எழுத்துக்கள் நீளமான சொல் 2023 ஆகும்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...