சிவன்மலையில் கிராம சபை கூட்டத்தில் தனியார் மாமிசம் பதப்படுத்தும் நிறுவனத்திற்கு தடை விதிக்க தீர்மானம்


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த சிவன்மலை ஊராட்சி மன்றம் சார்பில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் புதிய சாலை வசதிகள் கேட்டும் புகார் மனுக்களை பொதுமக்கள் கொடுத்தனர்.

மேலும் மாமிசம் பதப்படுத்தும் தொழிற்சாலை துவங்குவதை உடனடியாக தடைவிதிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கிராமசபை கூட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். சிவன்மலை ஊராட்சி மன்ற தலைவர் துரைசாமி தலைமையில், துணைத்தலைவர் சண்முகம் முன்னிலையில் இந்த கூட்டமானது நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் புதிய சாலை வசதிகள் கேட்டு புகார் மனுக்களை பொதுமக்கள் கொடுத்தனர். மேலும் சிவன்மலை கிராமம் ஜே.ஜே நகர் அருகில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் மாமிச தொழிற்சாலை தொடங்க உள்ளதாகவும், அதற்கு தடை விதிக்க கோரி மனுக்களை ஊர் பொதுமக்கள் வழங்கினர்.

சர்வே எண் 96/1 என்ற இடத்தில் SAKS & காவியாஸ் அக்ரோ பிராசசஸ் இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனம் கறிக்கோழி காடை, மீன், ஆடு போன்ற பறவை விலங்குகளின் மாமிசத்தை சுத்தம் செய்து பதப்படுத்தி ஏற்றுமதி செய்வதற்காக கட்டுமான பணிகளை செய்து வருகிறார்கள்.

மேற்படி தொழிற்சாலை செயல்பட்டால் கடுமையான சுகாதார கேடு ஏற்படும் கொசு, ஈ போன்ற தொல்லைகள் அதிகமாகும், மேலும் பறவை மற்றும் கால்நடைகளை சுத்தம் செய்யும் போது அதன் அசுத்த நீரை நேரடியாக பூமியில் விடுமாறு தொட்டி அமைத்துள்ளனர்.

இதனால் அருகில் உள்ள விவசாய கிணறுகள் மற்றும் ஊராட்சி குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படும் என்கின்றனர். மேலும் இது போன்ற தொழில் மக்கள் குடியிருப்பு பகுதி மற்றும் விவசாய நிலங்களுக்கு அருகில் செயல்பட அரசு சட்டவிதிகளின்படி அனுமதி இல்லை என புகார் அளித்தனர்.

மேலும் பாமாயிலுக்கு பதிலாக நியாய விலை கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும். காங்கேயம் நகராட்சி ஆனது முதல் நிலை நகராட்சியாக தேர்வு செய்யப்பட்டு அதை விரிவு படுத்தும் பணி நடைபெற்று வருவதாகவும், நகராட்சியுடன் சிவன்மலை இணைப்பதாக சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும், சிவன்மலைப் பகுதியானது கிராமங்களை உள்ளடக்கியது ஆகும்.

கிராம ஊராட்சிகளிலே சிறப்பான ஊராட்சி என அதிகாரிகள் பாராட்டிவருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசு வழங்கும் தேசிய உறுதித் திட்டம் விவசாயிகளுக்கு கிடைக்கும் மானியம் ஆகியவைகள் கிடைக்காமலும் போகும். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் நகராட்சியுடன் இணைத்தால் தடைப்பட்டுவிடும் எனவும் நகராட்சியுடன் இணைக்க கூடாது என புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து கிராம சபை கூட்டத்தில் இந்த மூன்று தீர்மானங்கள் உட்பட மொத்தம் 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கிராம சபை கூட்டத்திற்கு ஊரக உதவி இயக்குனர் (தணிக்கை) வி.ஜெகதீசன், ஆணையாளர் விமலாதேவி, மண்டலா துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராமச்சந்திரன், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...