உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்கக் கோரி விவசாயிகள் 2வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம்

பனமரத்துபாளையம், தொப்பம்பட்டி, வரப்பாளையம், கெத்தல்ரேவ், நஞ்சியம்பாளையம், தும்பலப்பட்டி, வேலம்பாளையம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராம பகுதியில் நீலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்துக்கு சென்று குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணைக்கு திருமூர்த்தி அணையில் இருந்து பிஏபி பாசனத் திட்டத்தில் உபரி நீரைத் திறந்துவிடக்கோரி விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.



இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் விவசாயிகளை 4 முறை பேச்சுவார்த்தைக்கு அழைத்து பின்னர் கடைசி நேரத்தில் கூட்டத்தை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது.



இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் 200-க்கும் மேற்பட்டோர் உப்பாறு அணையின் உட்பகுதியில் இறங்கி 2-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த இரண்டாவது நாள் போராட்டத்தில் 75-ஆவது குடியரசு தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சட்டமேதை அம்பேத்கர் அனைவருக்கும் சமம் என சட்டம் இயற்றினார். சட்டப்படி அனைவரும் நடக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.



ஆனால் உப்பாறு பாசன விவசாயிகளுக்கு சட்டப்படி வழங்கக்கூடிய இரண்டு டிஎம்சி தண்ணீரை பொதுப்பணித்துறை அதிகாரிகள் வழங்காமல் ஏமாற்றுவதாகவும். அதனால் சட்டமேதை அம்பேத்கரின் சட்டத்தையே பொதுப்பணித்துறை அதிகாரிகள் அவமானப்படுத்துவதாகவும் கருதி சட்டமேதை அம்பேத்கரின் திருவுருவப்படத்தை கையில் ஏந்தி அணைக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என கோஷமிட்டனர்.

இதனால் உப்பாறு அணை பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உப்பாறு அணை விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் அர்ஜுனன் தெரிவிக்கையில், தாராபுரம் தாலுகாவில் உள்ள பனமரத்து பாளையம், தொப்பம்பட்டி, வரப்பாளையம், கெத்தல்ரேவ், நஞ்சியம்பாளையம், தும்பலப்பட்டி, வேலம்பாளையம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராம பகுதியில் நீலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்துக்கு சென்று குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் உப்பாறு அணைப் பகுதி விவசாயிகளுக்கு, கால் நடைகளுக்கு கூட தண்ணீர் கிடைப்பதில்லை.

நேரடியாக 6300 ஏக்கரும் மறைமுகமாக 15,000 ஏக்கரும் விவசாய நிலம் விவசாய பணிகள் எதுவும் நடைபெறாமல் விவசாயிகள் வருமானமே இன்றி வாழ்க்கை நடத்துவதற்கே சிரமப்பட்டு வருகின்றனர்.

இதே நிலை நீடித்தால் அனைவரும் ஊரைக் காலி செய்து விட வேண்டும். இப்பகுதி விவசாயிகளுக்கு உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் எங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, உப்பாறு அணையின் முழுக் கொள்ளளவுக்குத் தண்ணீர் திறந்து விட வேண்டும் என இவ்வாறு தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...