கோவையில் இருவேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரே நாளில் இரண்டு கூலி தொழிலாளர்கள் பலி

மேட்டுப்பாளையம் ரோடு இடையர்பாளையம் ஜங்சன் அருகே நடந்த சாலை விபத்தில் ராஜசேகரன் என்ற கூலித்தொழிலாளியும், உக்கடம் பைபாஸ் ரோடு சேத்துமாவாய்க்கால் அருகே நிகழ்ந்த விபத்தில் மணிகண்டனம் என்ற மற்றொரு கூலித்தொழிலாளியும் உயிரிழந்தனர்.


கோவை: கோவை கோவில்மேடு நெசவாளர் காலனியை சேர்ந்தவர் ராஜசேகரன்(63). கூலி தொழிலாளி. இவர் (ஜன.25) மேட்டுப்பாளையம் ரோடு இடையர்பாளையம் ஜங்சன் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராத விதமாக ராஜசேகரன் மீது மோதியது. இதில் லாரி ஏறி அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து கோவை மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோல கோவை கெம்பட்டி காலனி ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் மணிகண்டன்(30). கூலி தொழிலாளி. இவர் (ஜன.25) மொபட்டில் சென்று கொண்டிருந்தார். உக்கடம் பைபாஸ் ரோடு சேத்துமாவாய்க்கால் அருகே சென்று கொண்டிருந்த போது நிலைதடுமாறி சாலையோரம் இருந்த சுவற்றில் மோதினார்.

இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அவரது உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின் இதுகுறித்து கோவை மேற்கு போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...