கோவை மாவட்டம் சூலூரை அடுத்த சுல்தான் பேட்டை பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. விவசாயியான இவர் தனது நிலத்திற்கு பட்டாகேட்டு அப்பகுதி நில அளவையரான சுப்ரமணியிடம் கேட்டுள்ளார். அப்போது, கந்தசாமியின் நிலத்தை அளவை செய்ய சுப்ரமணி ரூ.14 ஆயிரம் ரூபாயை லஞ்சமாக கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த கந்தசாமி, கோவை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் இது குறித்து புகார் அளித்தார்.
இது குறித்த புகாரின் பேரில் ரசாயனம் தடவிய நோட்டை லஞ்ச ஒழிபு போலீசார் கந்தசாமியிடம் கொடுத்தனர். அந்த நோட்டுகளை நில அளவையரான சுப்ரமணியனிடம் இன்று கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த போலீசார் சுப்ரமணியனை கையும் களவுமாக கைது செய்தனர்.
தொடர்ந்து, போலீசார் சுப்ரமணியனை கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையிலடைத்தனர்.