குடிதண்ணீர் குழாயில் திடீரென ஏற்பட்ட உடைப்பால் சாலை முழுவதும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தண்ணீர் வீணாகுவதை தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக குழாயை சரிசெய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: துடியலூர் அடுத்துள்ள கேப் டவுன் பகுதியில் மளிகை கடை அமைந்துள்ளது. அதன் முன்பு உள்ள சாலையில் உள்ள குடிதண்ணீர் குழாயில் இன்று (ஜன.27) மாலை உடைப்பு ஏற்பட்டு உள்ளது.
இதனால் நீண்ட நேரமாக சாலை முழுவதும் குடிதண்ணீர் வீணாகி வருகிறது. இதனால் சாலை முழுவதும் குடிதண்ணீர் வழிந்து ஓடுவதால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதனால் நீண்ட நேரமாக சாலை முழுவதும் குடிதண்ணீர் வீணாகி வருகிறது. இதனால் சாலை முழுவதும் குடிதண்ணீர் வழிந்து ஓடுவதால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.