கோவையில் நடைபெற்றுவரும் 31வது தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி.

கோவையில் நடைபெற்றுவரும் 31வது தேசிய அளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் பங்கேற்கும் தேசிய சாம்பியன் கூடைப்பந்து போட்டிகள் கோவை பி.எஸ்.ஜி. உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது மூன்றாம் நாள்  போட்டியில் ஆண்கள் முதல் போட்டியில் கொச்சி, சுங்கம் மற்றும் மத்திய கலால் அணியை எதிர்த்து பெங்களூரு, ஆர்மி சர்வீசஸ் கார்ப்ஸ் அண்டு சென்டர் அணி விளையாடியது. 

இதில் ஆர்மி சர்வீசஸ் கார்ப்ஸ் அண்டு சென்டர் அணி 73 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது. எதிர்த்து விளையாடிய சுங்கம் மற்றும் மத்திய கலால் அணி 46 புள்ளிகள் பெற்றது. இதில் ஆர்மி சர்வீசஸ் கார்ப் அண்டு சென்டர் அணியின் வீரர்கள் இசாக் டி. தாமஸ் 18 புள்ளிகளும், ஜிதாந்தர் சிங் 8 புள்ளிகளும் பெற்றனர். சுங்கம் மற்றும் மத்திய கலால் அணியின் வீரர்கள் எட்ரிக் 9 புள்ளிகளும், போனி 9 புள்ளிகளும் பெற்றனர். 


இரண்டாவது போட்டியில் இந்தியன் ஏர்போர்ஸ் அணியை எதிர்த்து லூதியான கூடைப்பந்து அகாடமி அணி விளையாடியது. இதில் இந்தியன் ஏர்போர்ஸ் அணி 95 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது, இதன் வீரர்கள் ஜி.நரேந்தர் 26 புள்ளிகள், ஹேமந்த் செரோன் 23 புள்ளிகளும் பெற்றனர். எதிர்த்து விளையாடிய லூதியான கூடைப்பந்து அகாடமி அணி 80 புள்ளிகள் பெற்றது. இதன் வீரர்கள் அர்ஷ்பிரீத் சிங் 24 புள்ளிகள், ஜெய்பால் சிங் 22 புள்ளிகள் பெற்றனர்.


மூன்றாவது போட்டியில் மத்திய இரயில்வே அணியை எதிர்த்து குஜராத், வருமான வரி அணி விளையாடியது. இதில் மத்திய இரயில்வே அணி 68 புள்ளிகள் பெற்றது. இதன் வீரர்கள் ராகேஷ் 16 புள்ளிகளும், அமித் 15 புள்ளிகளும் எடுத்தனர். எதிர்த்து விளையாடிய வருமான வரி அணி 63 புள்ளிகள் பெற்றது. இதன் வீரர்கள் டிஷாந்த் 23 புள்ளிகளும், காசி 21 புள்ளிகளும் எடுத்தனர். 


நான்காவது போட்டியில் டெக்ராடூன், ஓஎன்ஜிசி அணியை எதிர்த்து சென்னை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி விளையாடியது. இதில் ஓஎன்ஜிசி அணி 73 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது. எதிர்த்து விளையாடிய இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி 56 புள்ளிகள் பெற்றது. 




பெண்கள் முதல் போட்டியில் தென்னக இரயில்வே அணியை எதிர்த்து பஞ்சாப் அணி விளையாடியது. இதில் தென்னக இரயில்வே அணி 65 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது. எதிர்த்து விளையாடிய பஞ்சாப் அணி 52 புள்ளிகள் பெற்றது. இதில் தென்னக இரயில்வே அணியின் ராஜா பிரியா 15 புள்ளிகளும், அமிதா மின்ஜ் 14 புள்ளிகளும் எடுத்தனர். பஞ்சப் அணியின் ககன்தீப் கவுர் 16 புள்ளிகளும், அமன்பிரீத் கவுர் 14 புள்ளிகளும் பெற்றனர்.


இரண்டாவது போட்டியில் மேற்கு வங்க அணியை எதிர்த்து டெல்லி அணி விளையாடியது. இதில் மேற்கு வங்கம் அணி 79 புள்ளிகள் பெற்றது. இதன் வீராங்கனைகள் சீதாமணிடுடு 19 புள்ளிகளும், அன்ஜனா 15 புள்ளிகளும் பெற்றனர். எதிர்த்து விளையாடிய டெல்லி அணி 50 புள்ளிகள் பெற்றது. இதன் வீராங்களைகள் ஷாகிபா மற்றும் பிரின்சி ஆகியோர் 11 புள்ளிகள் பெற்றனர்.


மூன்றாவது போட்டியில் கேரளா அணியை எதிர்த்து தமிழ்நாடு அணி விளையாடியது. இதில் கேரளா அணி 73 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது. இதன் வீராங்கனைகள் பி. ஆஞ்சனா 26 புள்ளிகளும், பி.சூர்யா 12 புள்ளிகளும் எடுத்தனர்.  எதிர்த்து விளையாடிய தமிழக அணி 61 புள்ளிகள் பெற்றது. இதன் வீராங்கனைகள் ஆர்.வர்சனா 21 புள்ளிகளும், எஸ்.ஸ்ரீவித்யா 13 புள்ளிகளும் பெற்றனர்.


நான்காவது போட்டியில் தெலுங்கான அணியை எதிர்த்து சத்தீஸ்கர் அணி விளையாடியது. இதில் சத்தீஸ்கர் அணி 86 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது. எதிர்த்து விளையாடிய தெலுங்கான அணி 79 புள்ளிகள் பெற்றது.


நாளை நடைபெறும்  அரையிறுதி போட்டியில் ஆண்கள் பிரிவில் ஆர்மி சர்வீசஸ் கார்ப்ஸ் அண்டு சென்டர் அணியை எதிர்த்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி விளையாடுகிறது.மற்றொரு போட்டியில் இந்தியன் ஏர்போர்ஸ் அணியை எதிர்த்து ஓஎன்ஜிசி அணி விளையாடுகிறது
பெண்கள் பிரிவில் தென்னக இரயில்வே அணியை எதிர்த்து தமிழ்நாடு அணியும் மேற்கு வங்க அணியை எதிர்த்து சத்தீஸ்கர் அணியும் விளையாடுகின்றன.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...