என்னைப்பற்றி அபாண்டமான செய்திகளை பரப்புகிறார்கள் என்று செய்தியாளர் நேசபிரபு தன்னிடம் கூறியதாக செய்தியாளர்கள் சந்திப்பின்போது, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
கோவை: கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நியூஸ் 7 தொலைக்காட்சி நிருபரை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று (ஜன.28) நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நேச பிரபுவின் மெடிக்கல் செலவுகளை பாஜக ஏற்றுக்கொள்ளும் என உறுதி அளித்தார். பின் தன்னிடம், நேச பிரபு, என்னை பற்றி அபாண்டமான செய்திகளை பரப்புகிறார்கள் என்று கூறினார் என்றார்.