கோவை வெள்ளலூர் பகுதியில் உள்ள மாநகராட்சி குப்பை கிடங்கை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வெள்ளலூர் குப்பை கிடங்கை இடமாற்றம் செய்யக்கோரி, போத்தனூர்- செட்டிபாளையம் சாலையில் உள்ள குப்பை கிடங்கு அருகே பா ஜ க இளைஞரணி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது.
அப்போது, இக்குப்பை கிடங்கில் குப்பைகள் முறையாக தரம் பிரித்து மறு சுழற்சிக்கு உட்படுத்துவது இல்லை எனவும், குப்பைகளை மண் கொட்டி மூடப்படுவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
மேலும் குப்பை கிடங்கினால் சுற்றுவட்டார பொதுமக்கள் அடிக்கடி நோய் தாக்குதலுக்கு ஆளாக நேரிடுவதாகவும், குப்பை கிடங்கில் அதிகளவில் ஊழல் நடைபெறுவதாகவும் கூறிய அவர்கள், குப்பை கிடங்கை இடமாற்றம் செய்யும் வரை தொடர் போராட்டம் நடத்தப்படுமென தெரிவித்தனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் சுமார் 100 பேர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் வெள்ளலூர் குப்பை கிடங்கை இடமாற்றம் செய்யக்கோரி, போத்தனூர்- செட்டிபாளையம் சாலையில் உள்ள குப்பை கிடங்கு அருகே பா ஜ க இளைஞரணி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது.
அப்போது, இக்குப்பை கிடங்கில் குப்பைகள் முறையாக தரம் பிரித்து மறு சுழற்சிக்கு உட்படுத்துவது இல்லை எனவும், குப்பைகளை மண் கொட்டி மூடப்படுவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
மேலும் குப்பை கிடங்கினால் சுற்றுவட்டார பொதுமக்கள் அடிக்கடி நோய் தாக்குதலுக்கு ஆளாக நேரிடுவதாகவும், குப்பை கிடங்கில் அதிகளவில் ஊழல் நடைபெறுவதாகவும் கூறிய அவர்கள், குப்பை கிடங்கை இடமாற்றம் செய்யும் வரை தொடர் போராட்டம் நடத்தப்படுமென தெரிவித்தனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் சுமார் 100 பேர் கலந்து கொண்டனர்.