கோவை மாநகராட்சி குப்பை கிடங்கை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி பா ஜ க-வினர் உண்ணாவிரத போராட்டம்

கோவை வெள்ளலூர் பகுதியில் உள்ள மாநகராட்சி குப்பை கிடங்கை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வெள்ளலூர் குப்பை கிடங்கை இடமாற்றம் செய்யக்கோரி, போத்தனூர்- செட்டிபாளையம் சாலையில் உள்ள குப்பை கிடங்கு அருகே பா ஜ க இளைஞரணி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது.

அப்போது, இக்குப்பை கிடங்கில் குப்பைகள் முறையாக தரம் பிரித்து மறு சுழற்சிக்கு உட்படுத்துவது இல்லை எனவும், குப்பைகளை மண் கொட்டி மூடப்படுவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

மேலும் குப்பை கிடங்கினால் சுற்றுவட்டார பொதுமக்கள் அடிக்கடி நோய் தாக்குதலுக்கு ஆளாக நேரிடுவதாகவும், குப்பை கிடங்கில் அதிகளவில் ஊழல் நடைபெறுவதாகவும் கூறிய அவர்கள், குப்பை கிடங்கை இடமாற்றம் செய்யும் வரை தொடர் போராட்டம் நடத்தப்படுமென தெரிவித்தனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் சுமார் 100 பேர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...